மோடி அரசின் கறார் நடவடிக்கை: ரூ.83 ஆயிரம் கோடி வங்கி வராக்கடன் வசூல்!

Published:

reserve bank of india - 2026

மத்திய அரசின் கறார் நடவடிக்கையால் 2,100 பெரிய நிறுவனங்களின் ரூ.83 ஆயிரம் கோடி  வராக்கடன் தொகை வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள், தேசிய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். இதுபோன்ற முறைகேடுகளால், பொதுத் துறை வங்கிகளில்  வசூலிக்கப்படாமல் போன வராக் கடன் அதிக அளவில் சென்றது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நிறுவனங்களுக்கான ஐ.பி.சி எனப்படும் புதிய திவால் விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், எஸ்ஸார், பூஷண் குழுமம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடும் சிக்கலைச் சந்தித்தன. அவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால்,  அந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்நிலையில், வங்கிகளில் அந்த நிறுவனங்கல் வாங்கிய கடனை அவை திருப்பிச் செலுத்தியுள்ளன. இவ்வாறு சுமார் 2,100 நிறுவனங்கள் ரூ.83 ஆயிரம் கோடிக்கான கடனை வங்கிகளில் திருப்பிச் செலுத்தியுள்ளனவாம்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img