பெட்ரோல் விலை குறைப்பில் நாடகம் ஆடிய எண்ணெய் நிறுவனங்கள்!

cars petrol - 2026

கர்நாடக மாநில தேர்தல் முடிந்த பின்னர், தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல் விற்பனை விலை, இன்று சற்று இறக்கம் கண்டது. விலைக்குறைப்பில், லிட்டருக்கு 60 பைசா வரை குறைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு, திடீரென பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு வெறும் ஒரு காசு மட்டுமே குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில், பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகளும், டீசல் 59 காசுகளும் குறைக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஆனால், கணக்கீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அந்த விலைக் குறைப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு, திருத்தப்பட்ட விலையை தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு காசு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதியில் இருந்து நாள் ஒன்றுக்குச் சராசரியாக லிட்டருக்கு 25 முதல் 30 காசுகள் வரை உயர்த்தி வந்தன. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலருக்கும் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இப்படி தொடர்ச்சியாக உயர்ந்து வந்த விலை ஏற்றத்தின் படி, கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ. 9.30 காசுகளும் உயர்ந்தன.

இந்நிலையில் 14 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகள் குறைத்து ரூ.77.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு 56 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.68.75 ஆகவும் அறிவித்தன. ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த விலைக் குறைப்பு தவறானது, கணக்கீடு செய்வதில் தவறு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த எண்ணெய் நிறுவனங்கள் அந்த விலைக் குறைப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு, பெட்ரோல், டீசல் இரண்டிலும் லிட்டருக்கு ஒரு காசு குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories