ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தற்போது தற்காலிகமாக தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும் ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் என்றார்.


