‘பவுன்ஸ்’ ஆன முதல்வரின் பரிசு காசோலை

Published:

04 June10 yogi athitanth - 2026உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அலோக் மிஸ்ரா. சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் 94 சதவீத மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 7-வது இடம் பெற்றார். இதையடுத்து, அலோக் மிஸ்ராவை கடந்த மாதம் 29-ம் தேதி லக்னோவுக்கு அழைத்த முதல்வர் ஆதித்யநாத் அந்த மாணவரைப் பாராட்டி ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

மாணவர் அலோக் மிஸ்ராவுக்கு ஸ்டேட் வங்கியின் காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து, அலோக் மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை தன்னுடைய மகன் கணக்கு வைத்துள்ள தேனா வங்கியில் கடந்த 5-ம் தேதி டெபாசிட் செய்தார். ஆனால், வங்கியில் டெபாசிட் செய்து 3 நாட்களாகியும் பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து, அலோக் மிஸ்ராவின் தந்தை வங்கிக்குச் சென்று, பணம் வரவு வைக்கப்படாதது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது வங்கி அதிகாரிகள் அந்தக் காசோலையில் இடப்பட்டுள்ள கையொப்பம் தவறாக இருப்பதால், அந்தக் காசோலைக்கு பணம் தர இயலாது எனத் தெரிவித்துவிட்டனர். தவறான காசோலையை கொடுத்ததற்காக அபராதம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Related articles

Recent articles

spot_img