ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு: சீனாவில் எதிரொலித்த மோடியின் குரல்!

Published:

modi meeting china - 2026

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற அமர்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், பயங்கரவாதத்தின் விளைவாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடு என்றல் அது ஆப்கானிஸ்தான் என்று எடுத்துக் கொள்ளலாம்! பயங்கரவாத பாதிப்பால் மோசமான நாடுக்கு ஆப்கானிஸ்தான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே நேரம், அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று குறிப்பிட்டு மோடி, ஆப்கன் அதிபருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 6 சதவீதம் பேர் உள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, இதனை இரு மடங்காக உயர்த்த முடியும் என்றார். மேலும், இந்தியாவில் பௌத்த மதத் திருவிழாவுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறியஅவர், அண்டை நாடுகளுடனும், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடனும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறினார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img