ரம்ஜான் முடிந்தது; காஷ்மீரில் சண்டை நிறுத்த நீட்டிப்பு இல்லை: ராஜ்நாத் சிங்

rajnath singh - 2026

ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்த நீட்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்துத் தெரிவித்த போது, ரம்ஜான் மாதத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தக் காரணம்,, காஷ்மீர் மக்கள் மீதான அன்பும், அக்கறையுமே! ரம்ஜான் நோன்பை காஷ்மீர் வாசிகள் அமைதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே பொறுமையைக் கையாண்டோம் என்று கூறினார்.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு பிறத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

சண்டை நிறுத்தம் அறிவிக்கப் பட்டிருந்த காலத்தில் 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதச் செயல்கள் அரங்கேற்றியுள்ளன. எல்லைப் பகுதியில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் 9 பேரும், பொதுமக்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த சண்டை நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தங்கள் பலத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர். லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகள் பூஞ்ச், ஜம்மு, நவ்காம் பகுதிகளில் ஊடுருவத் தயாராக இருப்பதாகவும், இந்த மாதம் 450 பயங்கரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் உள்ளனர் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories