December 6, 2025, 3:40 AM
24.9 C
Chennai

ஆணையம் அமைப்பதில் சிக்கல்- மகன் குமாரசாமி! நீர் திறப்பதில் இல்லை சிக்கல் – தந்தை தேவேகௌட

deve gowda kumarasamy - 2025

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சிக்கல் இருப்பதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். அதே நேரம் தமிழகத்துக்கு நீர் திறப்பதில் இந்த முறை சிக்கல் இருக்காது என்று அவரின் தந்தை தேவேகௌட கூறியுள்ளார்.

தில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. அப்போது அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. நாங்கள் காவிரி ஆணையத்திற்கு எதிரானவர்கள் இல்லை. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அமைப்பை செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மாற்றம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வோம். காவிரி ஆணைய உறுப்பினர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று கூறினார்.

முன்னதாக, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி சென்றுள்ள குமாரசாமி, இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். பின் மத்திய ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க உள்ள நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு நீர் வழங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை தேவேகௌட, இந்த முறை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் எவுதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தேவேகௌட இது குறித்துக் கூறியபோது, தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவில் நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் மத்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறினார்.

தமிழகத்துக்கு ராணுவத் தளவாட அமைப்பு, வேலைவாய்ப்புகள் குறித்து திறந்து வைக்க வந்திருந்த பிரதமர் மோடிக்கு, காவிரி விவகாரத்தில் கருப்பு கொடி காட்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நீரைத் தரமாட்டேன் என்று அடம்பிடித்து ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் அடம் பிடிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பச்சைக் கம்பளம் விரித்து திருச்சிக்கும் மதுரைக்கும் வந்தவரை வரவேற்று தங்கள் காவிரி அரசியலை வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories