ஆணையம் அமைப்பதில் சிக்கல்- மகன் குமாரசாமி! நீர் திறப்பதில் இல்லை சிக்கல் – தந்தை தேவேகௌட

deve gowda kumarasamy - 2026

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சிக்கல் இருப்பதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். அதே நேரம் தமிழகத்துக்கு நீர் திறப்பதில் இந்த முறை சிக்கல் இருக்காது என்று அவரின் தந்தை தேவேகௌட கூறியுள்ளார்.

தில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. அப்போது அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. நாங்கள் காவிரி ஆணையத்திற்கு எதிரானவர்கள் இல்லை. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அமைப்பை செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மாற்றம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வோம். காவிரி ஆணைய உறுப்பினர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று கூறினார்.

முன்னதாக, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி சென்றுள்ள குமாரசாமி, இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். பின் மத்திய ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க உள்ள நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு நீர் வழங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை தேவேகௌட, இந்த முறை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் எவுதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தேவேகௌட இது குறித்துக் கூறியபோது, தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவில் நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் மத்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறினார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

தமிழகத்துக்கு ராணுவத் தளவாட அமைப்பு, வேலைவாய்ப்புகள் குறித்து திறந்து வைக்க வந்திருந்த பிரதமர் மோடிக்கு, காவிரி விவகாரத்தில் கருப்பு கொடி காட்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நீரைத் தரமாட்டேன் என்று அடம்பிடித்து ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் அடம் பிடிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பச்சைக் கம்பளம் விரித்து திருச்சிக்கும் மதுரைக்கும் வந்தவரை வரவேற்று தங்கள் காவிரி அரசியலை வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories