ஆணையம் அமைப்பதில் சிக்கல்- மகன் குமாரசாமி! நீர் திறப்பதில் இல்லை சிக்கல் – தந்தை தேவேகௌட

deve gowda kumarasamy - 2026

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சிக்கல் இருப்பதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். அதே நேரம் தமிழகத்துக்கு நீர் திறப்பதில் இந்த முறை சிக்கல் இருக்காது என்று அவரின் தந்தை தேவேகௌட கூறியுள்ளார்.

தில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. அப்போது அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. நாங்கள் காவிரி ஆணையத்திற்கு எதிரானவர்கள் இல்லை. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அமைப்பை செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மாற்றம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வோம். காவிரி ஆணைய உறுப்பினர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று கூறினார்.

முன்னதாக, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி சென்றுள்ள குமாரசாமி, இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். பின் மத்திய ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க உள்ள நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு நீர் வழங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை தேவேகௌட, இந்த முறை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் எவுதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தேவேகௌட இது குறித்துக் கூறியபோது, தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவில் நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் மத்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

தமிழகத்துக்கு ராணுவத் தளவாட அமைப்பு, வேலைவாய்ப்புகள் குறித்து திறந்து வைக்க வந்திருந்த பிரதமர் மோடிக்கு, காவிரி விவகாரத்தில் கருப்பு கொடி காட்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நீரைத் தரமாட்டேன் என்று அடம்பிடித்து ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் அடம் பிடிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பச்சைக் கம்பளம் விரித்து திருச்சிக்கும் மதுரைக்கும் வந்தவரை வரவேற்று தங்கள் காவிரி அரசியலை வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories