சேலம் 8 வழி சாலை திட்டத்தை வைத்து கலவரத்தை நிகழ்த்த திட்டமிட்டவர்கள் கைது!

salem valarmathi piyush mansoor - 2026

சென்னை – சேலம் 8 வழி சாலைத் திட்டத்தை வைத்து இன்னொரு தூத்துக்குடி கலவரம் போல் வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி, வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருபவர்களை அடையாளம் கண்டு, போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதே போல் அண்மைக் காலமாக தமிழகத்தில் கூடங்குளம் தொடங்கி, நெடுவாசல், ஜல்லிக்கட்டு, தேனி நியூட்ரினோ, தூத்துக்குடி என பல்வேறு சம்பவங்களில் ஒரு சிலர் உள்நோக்கத்துடன் மக்களிடம் வன்முறைக் கருத்துகளைப் பரப்பி, மக்களை போராடத் தூண்டி விட்டு அவர்களுடன் கலந்து கலவரத்தை நிகழ்த்தி வருவதாகக் கூறப் படுகிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி கலவரத்தை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்ற பன்ருட்டி வேல்முருகன், பாரதிராஜா உள்ளிட்ட சினிமா இயக்குனர்கள், சீமான், திருமுருகன் காந்தி, கௌதமன் உள்ளிட்டோரும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இதனிடையே, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில், வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இந்தத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்களை போராட்டத் தூண்டும் வகையிலும், போராட்டத்துக்கு ஆள் சேர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சம்பளத்துக்கு ஆள் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் வன்முறைக் கருத்துகளைத் தெரிவித்து வந்த வளர்மதி என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சேலம் சென்னை எட்டு வழிச் சாலை குறித்து கருத்து தெரிவித்த பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வளர்ச்சிக்கான திட்டமே என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் மிகவும் பயன்பெறும் என்று கூறிய அவர், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுக்காது என்றார். வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களே அனைத்து திட்டங்களையும் எதிர்க்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories