சேலம் 8 வழி சாலை திட்டத்தை வைத்து கலவரத்தை நிகழ்த்த திட்டமிட்டவர்கள் கைது!

salem valarmathi piyush mansoor - 2026

சென்னை – சேலம் 8 வழி சாலைத் திட்டத்தை வைத்து இன்னொரு தூத்துக்குடி கலவரம் போல் வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி, வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருபவர்களை அடையாளம் கண்டு, போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதே போல் அண்மைக் காலமாக தமிழகத்தில் கூடங்குளம் தொடங்கி, நெடுவாசல், ஜல்லிக்கட்டு, தேனி நியூட்ரினோ, தூத்துக்குடி என பல்வேறு சம்பவங்களில் ஒரு சிலர் உள்நோக்கத்துடன் மக்களிடம் வன்முறைக் கருத்துகளைப் பரப்பி, மக்களை போராடத் தூண்டி விட்டு அவர்களுடன் கலந்து கலவரத்தை நிகழ்த்தி வருவதாகக் கூறப் படுகிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி கலவரத்தை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்ற பன்ருட்டி வேல்முருகன், பாரதிராஜா உள்ளிட்ட சினிமா இயக்குனர்கள், சீமான், திருமுருகன் காந்தி, கௌதமன் உள்ளிட்டோரும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இதனிடையே, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில், வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இந்தத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்களை போராட்டத் தூண்டும் வகையிலும், போராட்டத்துக்கு ஆள் சேர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சம்பளத்துக்கு ஆள் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் வன்முறைக் கருத்துகளைத் தெரிவித்து வந்த வளர்மதி என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சேலம் சென்னை எட்டு வழிச் சாலை குறித்து கருத்து தெரிவித்த பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வளர்ச்சிக்கான திட்டமே என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் மிகவும் பயன்பெறும் என்று கூறிய அவர், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுக்காது என்றார். வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களே அனைத்து திட்டங்களையும் எதிர்க்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories