செஷல்ஸ் அதிபருக்கு டோர்னியர் விமானத்தை பரிசளித்த இந்தியா.. !

Published:

aircraft gifted to sheychellies president - 2026

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரேவுக்கு நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை பரிசளித்தார்.

6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரே. இவர் நேற்று பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் செஷல்ஸ் அதிபருக்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானம் ஒன்றை பரிசளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிட்., தயாரிப்பான டோர்னியர் ரக டிஓ 228 விமானத்தை செஷல்ஸ் அதிபரிடம் தில்லி பாலம் விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்படைத்தார். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

 

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img