ஜிஎஸ்டி., வரி முதலாண்டு நிறைவு: என்ன சொல்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி!

arun jaitley - 2026
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

புது தில்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி., வரி அமலாக்கப்பட்டதன் முதலாண்டு நிறைவில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது கருத்துகளை வெளியிட்டார். பேஸ்புக் பதிவில் ஒரு நோட்ஸ்ஸாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்த ஜேட்லி, ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி என்ற ராகுலின் கருத்து இந்தியாவில் சரிவராது எனக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி., வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதன் முதலாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அருண் ஜேட்லி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைத் தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பது…

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப் பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு இது. மறைமுக வரிகள், பதினேழு வரிகள், பல வித செஸ் வரிகள், மத்திய மாநில வரிகள் என பல கட்ட வரி விதிப்பை தூக்கி எறிந்துவிட்டு, ஒற்றை வரி விதிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப் பட்டது.

இந்தியா, பல மாநிலங்களின் தொகுப்பு. வெவ்வேறு குணமுள்ள மாநிலங்களின் ஒற்றைத் தொகுப்பாகத் திகழும் ஒரு நாட்டில், இந்த ஒற்றைத் தொகுப்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்?

இந்தியாவில் ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறார். இது இந்தியாவில் சரி வராது. ராகுல் சொல்வது ஒரு மோசடி திட்டம். ஒரே விதமான எண்ணங்கள், மற்றும் அதிக வரி கட்டும் மக்கள் வசிக்கும் நாட்டில் இது சாத்தியமாகலாம். ஜிஎஸ்டி ஒரே வரி விதிப்புக்காக, சிங்கப்பூரைக் கையைக் காட்டுகிறார்கள். சிங்கப்பூரின் ஜிஎஸ்டி., குறித்தான கொள்கையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே உள்ள மக்கள் தொகை வேறுபாட்டை பார்க்க வேண்டும். சிங்கப்பூரில் உணவுக்கும் ஆடம்பர கார்களுக்கும் 7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் சாத்தியமாகுமா?

பெரும்பாலான உணவு பொருட்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு வழக்கமான வரி வசூலிக்கப்படுகிறது. மற்றவைகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. வரி வசூல் அதிகரிக்கும்போது, 28 சதவீத பட்டியலில் உள்ள பொருட்கள் மீதான வரி குறையும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி தொடரும் என்று ஜேட்லி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

அவரது கட்டுரையில் ஆங்கில வடிவம்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories