ஜிஎஸ்டி., வரி முதலாண்டு நிறைவு: என்ன சொல்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி!

arun jaitley - 2026
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

புது தில்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி., வரி அமலாக்கப்பட்டதன் முதலாண்டு நிறைவில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது கருத்துகளை வெளியிட்டார். பேஸ்புக் பதிவில் ஒரு நோட்ஸ்ஸாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்த ஜேட்லி, ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி என்ற ராகுலின் கருத்து இந்தியாவில் சரிவராது எனக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி., வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதன் முதலாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அருண் ஜேட்லி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைத் தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பது…

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப் பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு இது. மறைமுக வரிகள், பதினேழு வரிகள், பல வித செஸ் வரிகள், மத்திய மாநில வரிகள் என பல கட்ட வரி விதிப்பை தூக்கி எறிந்துவிட்டு, ஒற்றை வரி விதிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப் பட்டது.

இந்தியா, பல மாநிலங்களின் தொகுப்பு. வெவ்வேறு குணமுள்ள மாநிலங்களின் ஒற்றைத் தொகுப்பாகத் திகழும் ஒரு நாட்டில், இந்த ஒற்றைத் தொகுப்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்?

இந்தியாவில் ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறார். இது இந்தியாவில் சரி வராது. ராகுல் சொல்வது ஒரு மோசடி திட்டம். ஒரே விதமான எண்ணங்கள், மற்றும் அதிக வரி கட்டும் மக்கள் வசிக்கும் நாட்டில் இது சாத்தியமாகலாம். ஜிஎஸ்டி ஒரே வரி விதிப்புக்காக, சிங்கப்பூரைக் கையைக் காட்டுகிறார்கள். சிங்கப்பூரின் ஜிஎஸ்டி., குறித்தான கொள்கையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே உள்ள மக்கள் தொகை வேறுபாட்டை பார்க்க வேண்டும். சிங்கப்பூரில் உணவுக்கும் ஆடம்பர கார்களுக்கும் 7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் சாத்தியமாகுமா?

பெரும்பாலான உணவு பொருட்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு வழக்கமான வரி வசூலிக்கப்படுகிறது. மற்றவைகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. வரி வசூல் அதிகரிக்கும்போது, 28 சதவீத பட்டியலில் உள்ள பொருட்கள் மீதான வரி குறையும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி தொடரும் என்று ஜேட்லி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

அவரது கட்டுரையில் ஆங்கில வடிவம்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories