ஜிஎஸ்டி., வரி முதலாண்டு நிறைவு: என்ன சொல்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி!

arun jaitley - 2026
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

புது தில்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி., வரி அமலாக்கப்பட்டதன் முதலாண்டு நிறைவில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது கருத்துகளை வெளியிட்டார். பேஸ்புக் பதிவில் ஒரு நோட்ஸ்ஸாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்த ஜேட்லி, ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி என்ற ராகுலின் கருத்து இந்தியாவில் சரிவராது எனக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி., வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதன் முதலாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அருண் ஜேட்லி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைத் தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பது…

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப் பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு இது. மறைமுக வரிகள், பதினேழு வரிகள், பல வித செஸ் வரிகள், மத்திய மாநில வரிகள் என பல கட்ட வரி விதிப்பை தூக்கி எறிந்துவிட்டு, ஒற்றை வரி விதிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப் பட்டது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்தியா, பல மாநிலங்களின் தொகுப்பு. வெவ்வேறு குணமுள்ள மாநிலங்களின் ஒற்றைத் தொகுப்பாகத் திகழும் ஒரு நாட்டில், இந்த ஒற்றைத் தொகுப்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்?

இந்தியாவில் ஜிஎஸ்டியில் ஒரே கட்ட வரி விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறார். இது இந்தியாவில் சரி வராது. ராகுல் சொல்வது ஒரு மோசடி திட்டம். ஒரே விதமான எண்ணங்கள், மற்றும் அதிக வரி கட்டும் மக்கள் வசிக்கும் நாட்டில் இது சாத்தியமாகலாம். ஜிஎஸ்டி ஒரே வரி விதிப்புக்காக, சிங்கப்பூரைக் கையைக் காட்டுகிறார்கள். சிங்கப்பூரின் ஜிஎஸ்டி., குறித்தான கொள்கையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே உள்ள மக்கள் தொகை வேறுபாட்டை பார்க்க வேண்டும். சிங்கப்பூரில் உணவுக்கும் ஆடம்பர கார்களுக்கும் 7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் சாத்தியமாகுமா?

பெரும்பாலான உணவு பொருட்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு வழக்கமான வரி வசூலிக்கப்படுகிறது. மற்றவைகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. வரி வசூல் அதிகரிக்கும்போது, 28 சதவீத பட்டியலில் உள்ள பொருட்கள் மீதான வரி குறையும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி தொடரும் என்று ஜேட்லி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

அவரது கட்டுரையில் ஆங்கில வடிவம்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories