காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!

01 June16 Modi - 2026

ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதை ஒட்டி சுயராஜ்யா என்கிற இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய ஓர் ஆண்டில் 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும் இதனால் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் எழுபது சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஜிஎஸ்டி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் ஜிஎஸ்டி வரி என்பது, கேட்பதற்கு எளிதானதாகத்தான் இருக்கும். ஆனால் சொகுசுப் பொருளான மெர்சிடிஸ் கார்களுக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிப்பது என்பது சரியான நடைமுறையாக இருக்குமா?

இப்போது ஏழை எளிய மக்கள் வாஙகும் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியே விதிக்கப்படுகிறது. அவை அனைத்தையும் 18 சதவீதத்திற்குக் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும்? காங்கிரஸில் சிலர் ஒரே விகித ஜிஎஸ்டி குறித்துப் பேசி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

நாடு முழுவதும் ஒரே வரிமுறை என்பதால் மாநில எல்லைகளில் இருந்த வணிக வரிச் சோதனைச் சாவடிகள் ஒழிக்கப்பட்டு நேரமும் பணமும் சேமிக்கப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. சரக்கு சேவை வரி சிக்கலானது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா?

17 வகை வரிகளும் 23 வகை மேல் வரிகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரே வரிமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டதால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. மாநில அரசுகளும் மக்களும் ஊடகங்களும் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிமுறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 400 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 150 பொருட்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், சரக்கு சேவை வரி முறை வளர்ச்சி, எளிமை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories