காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!

01 June16 Modi - 2026

ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதை ஒட்டி சுயராஜ்யா என்கிற இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய ஓர் ஆண்டில் 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும் இதனால் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் எழுபது சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஜிஎஸ்டி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் ஜிஎஸ்டி வரி என்பது, கேட்பதற்கு எளிதானதாகத்தான் இருக்கும். ஆனால் சொகுசுப் பொருளான மெர்சிடிஸ் கார்களுக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிப்பது என்பது சரியான நடைமுறையாக இருக்குமா?

இப்போது ஏழை எளிய மக்கள் வாஙகும் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியே விதிக்கப்படுகிறது. அவை அனைத்தையும் 18 சதவீதத்திற்குக் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும்? காங்கிரஸில் சிலர் ஒரே விகித ஜிஎஸ்டி குறித்துப் பேசி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

நாடு முழுவதும் ஒரே வரிமுறை என்பதால் மாநில எல்லைகளில் இருந்த வணிக வரிச் சோதனைச் சாவடிகள் ஒழிக்கப்பட்டு நேரமும் பணமும் சேமிக்கப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. சரக்கு சேவை வரி சிக்கலானது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா?

17 வகை வரிகளும் 23 வகை மேல் வரிகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரே வரிமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டதால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. மாநில அரசுகளும் மக்களும் ஊடகங்களும் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிமுறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 400 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 150 பொருட்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், சரக்கு சேவை வரி முறை வளர்ச்சி, எளிமை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories