காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!

01 June16 Modi - 2026

ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதை ஒட்டி சுயராஜ்யா என்கிற இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய ஓர் ஆண்டில் 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும் இதனால் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் எழுபது சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஜிஎஸ்டி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் ஜிஎஸ்டி வரி என்பது, கேட்பதற்கு எளிதானதாகத்தான் இருக்கும். ஆனால் சொகுசுப் பொருளான மெர்சிடிஸ் கார்களுக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிப்பது என்பது சரியான நடைமுறையாக இருக்குமா?

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

இப்போது ஏழை எளிய மக்கள் வாஙகும் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியே விதிக்கப்படுகிறது. அவை அனைத்தையும் 18 சதவீதத்திற்குக் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும்? காங்கிரஸில் சிலர் ஒரே விகித ஜிஎஸ்டி குறித்துப் பேசி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

நாடு முழுவதும் ஒரே வரிமுறை என்பதால் மாநில எல்லைகளில் இருந்த வணிக வரிச் சோதனைச் சாவடிகள் ஒழிக்கப்பட்டு நேரமும் பணமும் சேமிக்கப்பட்டு, உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. சரக்கு சேவை வரி சிக்கலானது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா?

17 வகை வரிகளும் 23 வகை மேல் வரிகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரே வரிமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டதால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. மாநில அரசுகளும் மக்களும் ஊடகங்களும் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிமுறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 400 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 150 பொருட்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், சரக்கு சேவை வரி முறை வளர்ச்சி, எளிமை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories