தாத்ரா நாகர்ஹவேலியில் மருத்துவக் கல்லூரி: மோடிக்கு மக்கள் பாராட்டுக் கடிதம்!

Published:

04 June27 Modi - 2026தாத்ரா நாகர்ஹவேலியில் முதல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்காக பிரதமர் மோடிக்கு அப்பகுதி இளைஞர்கள் தபால் கார்டுகள் மூலம் தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

தாத்ரா நாகர்ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்லூரி கட்டடத்துக்காக ரூ.189 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2019-20 ஆம் ஆண்டு முதல் கல்லூரி இயங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தங்களது பகுதியில் கல்லூரி தொடங்கப்பட இருப்பதை அடுத்து அப்பகுதி இளைஞர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தபால் கார்டுகளின் மூலம் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளனர்.

இதை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இது ஊக்கமளிக்கும் வகையில் திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img