பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை!

janaki - 2026

திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ அல்லது சாதாரண பரிசோதனைக்காகவோ அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். ஹைதரபாத்தில் தங்கியுள்ள எஸ்.ஜானகி, இப்படி மருத்துவமனைக்குச் சென்று வரும்போதெல்லாம், அவரது உடல் நிலை குறித்து ஏதாவது வதந்திகள் பரப்பப் படுகின்றன.

இது குறித்து பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஜானகி, தயவு செய்து என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் கொல்லாதீர்கள் என்று கூறினார். ஆனாலும் வதந்திகள் மட்டும் நின்றபாடில்லை.

இந்நிலையில் மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சங்கம் ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. ஜானகி குறித்து யாரோ சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்கள். இது குறித்து பரிசீலித்த கேரள கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சாதாரணமாகவே, தங்கள் போனுக்கு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களைப் படித்து, அது திடீர் அதிர்ச்சித் தகவல் என்பது போல் தோன்றினால், அடடே, அப்டியா, அடடா,, அய்யய்யோ என்ற ரீதியில் உச்சு கொட்டிவிட்டு, முதல்வேலையாக அந்தத் தகவலை அடுத்தவருக்கு பார்வர்ட் செய்வதும், குரூப்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால் அது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories