பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை!

janaki - 2026

திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ அல்லது சாதாரண பரிசோதனைக்காகவோ அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். ஹைதரபாத்தில் தங்கியுள்ள எஸ்.ஜானகி, இப்படி மருத்துவமனைக்குச் சென்று வரும்போதெல்லாம், அவரது உடல் நிலை குறித்து ஏதாவது வதந்திகள் பரப்பப் படுகின்றன.

இது குறித்து பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஜானகி, தயவு செய்து என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் கொல்லாதீர்கள் என்று கூறினார். ஆனாலும் வதந்திகள் மட்டும் நின்றபாடில்லை.

இந்நிலையில் மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சங்கம் ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. ஜானகி குறித்து யாரோ சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்கள். இது குறித்து பரிசீலித்த கேரள கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சாதாரணமாகவே, தங்கள் போனுக்கு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களைப் படித்து, அது திடீர் அதிர்ச்சித் தகவல் என்பது போல் தோன்றினால், அடடே, அப்டியா, அடடா,, அய்யய்யோ என்ற ரீதியில் உச்சு கொட்டிவிட்டு, முதல்வேலையாக அந்தத் தகவலை அடுத்தவருக்கு பார்வர்ட் செய்வதும், குரூப்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால் அது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories