கைலாஷ் யாத்திரை; சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்: தொடரும் மீட்புப் பணி!

Published:

helecoptor nepal - 2026

புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள மலைப் பகுதியைக் கடந்து செல்ல யாத்திரீகர்கள் முயன்ற போது, பலத்த மழைம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்க களமிறங்கியுள்ள இந்திய ராணுவ விமானப்படை நேபாள ராணுவத்துடன் இணைந்து முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எம்.ஐ.17 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள் என மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று உயிரிழந்த தமிழகத்தின் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் உடல் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை கொண்டு வரப்பட்டு, வேன் மூலம் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img