சந்தனப் பொட்டு வெச்சி நடிச்சது தப்பாய்யா? பொண்ண மதரசாவுல இருந்து நீக்கிட்டாங்க..! இஸ்லாமியரின் குமுறல்!

hina malayil - 2026

கேரள மாநிலத்தில், மாநில பாரம்பரிய பண்பாட்டு வழக்கப் படி, சந்தனப் பொட்டு வைத்து ஒரு குறும்படத்தில் நடித்த காரணத்துக்காக, மாணவி ஒருவரை மதரஸா பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை பதிவு செய்த முகநூல் பதிவு, வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்தவர் உம்மர் மலயில். இவரது மகள் ஹீனா. மதரஸா ஒன்றில் பயிலும் மாணவியான இவர் குறும்படம் ஒன்றில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துள்ளார். இந்தப் படத்தைக் கண்ட மதரஸா, உடனடியாக அந்தப் பெண்ணை மதரஸாவில் இருந்து வெளியேற்றியுள்ளது. இது தொடர்பாக தந்தை உம்மர் மலயில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அந்தப் பதிவில், நியாயம் கேட்டு அவர் கூறியுள்ளதற்கு பலரும் கருத்துப் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

உம்மர் மலையில் தனது பதிவில், என் மகள் எப்போதுமே பள்ளி மற்றும் மதரஸாவில் முதல் இடத்தைப் பெறுவாள். கல்வி அறிவுடன் பாடல், நடிப்பு என அனைத்திலும் சிறப்பிடம் பெறுபவள். மாவட்ட அளவிலான போட்டிகள் பலவற்றில் பங்கெடுத்தவள். தன் திறமைகளை கச்சிதமாக வெளிப்படுத்தி பரிசுகளைப் பெறுபவள். மதரஸா சார்பில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் 5-ஆவது இடம் வந்து சாதனை படைத்தாள். எனினும் அவள் தற்போது மதரஸாவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இதுதான்.அவள் குறும்படம் ஒன்றில் நடித்தாள். அதற்காக நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்திருந்தாள். இதனால் அவளை மதரஸாவில் இருந்து நீக்கியுள்ளனர். நல்லவேளை.. கல்லெறிந்து கொல்லப்படும் அளவிற்கு என் மகளுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

அவர் தனது முகநூல் பதிவில் ஹீனா நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்திருக்கும் படத்தையும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். மேலும், ஹீனா பள்ளியில் பாடிய பாடல்கள், பரிசு பெற்ற காட்சிகள் வீடியோக்களையும் தனது முகநூல் பதிவில் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்


அவரது பதிவு அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மதரஸாவிற்கு எதிராக துணிந்து நின்றதாக பலரும் உம்மருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆயினும் சிலர், இது இஸ்லாத்தை கெடுக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளனர்.

இதனிடையே உம்மர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இஸ்லாமை தான் தொடர்ந்து நம்புவதாகவும், அதனையே பின் தொடர்வதாகவும் உறுதிபடக் கூறியுள்ளார். அந்தப் பதிவில், இது ஒரு உலகப் பிரச்னை அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளை பயன்படுத்தி மதத்தை களங்கப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இது ஒரு தனிப்பட்ட பிரச்னை. நீங்கள் சொல்வதுபோல், என் மதத்திற்கு நான் எதிரானவன் இல்லை. நான் அதனை 100 சதவீதம் இன்னும் நம்புகிறேன். அதற்கு ஆதரவும் மரியாதையும் தருவேன். நான் மனிதனை நேசிக்கிறேன். என்னை துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்களே..? முதலில் பிரச்னை என்ன..? உண்மை என்ன? என தெரிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா..? அது தொடர்பாக ஒரு மெசேஜ் மூலமாக கூட என்னிடம் பேசினீர்களா..? அதன் பின் என்னை வைத்து ட்ரோல் செய்து வீடியோ போடலாம்” எனக் கூறியுள்ளார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

அவரது முகநூல் பக்கம் இப்போது பிரபலமாகிவிட்டது. கேரளத்தில் ஆயிரக்கணக்கானோர் இப்போது அந்தச் சிறுமியின் பாடல்களை, படங்களை முகநூலில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories