ஏடிஎம்மில் திருடுவது எப்படி? என்று ஓர் இளைஞர், பட்டதாரிகள் சிலருக்கு கட்டண வகுப்பு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சகானி என்ற 26 வயதுள்ள பட்டதாரி இளைஞன், ஏடிஎம்மில் எப்படி கொள்ளையடிப்பது என்பது பற்றி தனி பள்ளி ஒன்றையே நடத்தி வந்துள்ளார். அதில் 55 பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்துள்ளர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்ட சகானியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த செய்தி தெரிய வந்துள்ளது. இவர் மட்டும் ரூ.1 கோடி கொள்ளையடித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.


