December 5, 2025, 4:55 PM
27.9 C
Chennai

மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!

karunanidhi modi2 - 2025

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல்  உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர் மோடிக்கு இல்லை என்று தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக நேற்று மாலை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியது. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் வந்து பார்த்துச் சென்ற பின்னர், நேற்று இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வந்து மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக., வலைத்தளப் போராளிகள் மத்தியில் திடீரென எதிர்ப்பு கிளம்பியது. முன்னர் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு தாமே வலியச் சென்று நலம் விசாரித்தார். அப்போது பாஜக.,வினர் பலரும் புருவத்தை உயர்த்தினர். திமுக., பாஜக., கூட்டணி ஏற்படப் போகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதன் பின்னர்தான் திமுக.,வினர் மோடிக்கு எதிராக பல மோசமான போராட்டங்களை நடத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் காவிரிப் போராட்டத்தை தீவிரமாக நடத்தினர்.

காவிரி போராட்டம் சென்னையில் நடைபெற்ற போது, சென்னைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சிக்கு வந்தார் மோடி. அப்போது கோபேக் மோடி என ஹேஷ் டேக் இட்டு, திமுக.,வினர் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். அது பாஜக.,வினருக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காட்சி அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் இத்தகைய பிரசாரங்கள் முன்னெடுக்கப் படுவது குறித்து தனது வருத்தத்தை மோடி சிலரிடம் பகிர்ந்து கொண்டு, தமிழகம் ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதனை முன்னிட்டே, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பாட்டில், தமிழகத்தில் உள்ள சிலரின் துணையுடன், பத்திரிகை முதலாளிகள், ஊடகப் புள்ளிகளை அழைத்து, தில்லிக்குச் சென்று மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தப் பட்டதாம்.

இந்நிலையில் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னைக்கு பிரதமர் மோடி வருவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்று தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories