மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!

karunanidhi modi2 - 2026

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல்  உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர் மோடிக்கு இல்லை என்று தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக நேற்று மாலை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியது. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் வந்து பார்த்துச் சென்ற பின்னர், நேற்று இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வந்து மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக., வலைத்தளப் போராளிகள் மத்தியில் திடீரென எதிர்ப்பு கிளம்பியது. முன்னர் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு தாமே வலியச் சென்று நலம் விசாரித்தார். அப்போது பாஜக.,வினர் பலரும் புருவத்தை உயர்த்தினர். திமுக., பாஜக., கூட்டணி ஏற்படப் போகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதன் பின்னர்தான் திமுக.,வினர் மோடிக்கு எதிராக பல மோசமான போராட்டங்களை நடத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் காவிரிப் போராட்டத்தை தீவிரமாக நடத்தினர்.

காவிரி போராட்டம் சென்னையில் நடைபெற்ற போது, சென்னைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சிக்கு வந்தார் மோடி. அப்போது கோபேக் மோடி என ஹேஷ் டேக் இட்டு, திமுக.,வினர் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். அது பாஜக.,வினருக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

இந்நிலையில், காட்சி அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் இத்தகைய பிரசாரங்கள் முன்னெடுக்கப் படுவது குறித்து தனது வருத்தத்தை மோடி சிலரிடம் பகிர்ந்து கொண்டு, தமிழகம் ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதனை முன்னிட்டே, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பாட்டில், தமிழகத்தில் உள்ள சிலரின் துணையுடன், பத்திரிகை முதலாளிகள், ஊடகப் புள்ளிகளை அழைத்து, தில்லிக்குச் சென்று மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தப் பட்டதாம்.

இந்நிலையில் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னைக்கு பிரதமர் மோடி வருவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்று தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories