மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!

karunanidhi modi2 - 2026

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல்  உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர் மோடிக்கு இல்லை என்று தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக நேற்று மாலை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியது. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் வந்து பார்த்துச் சென்ற பின்னர், நேற்று இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வந்து மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக., வலைத்தளப் போராளிகள் மத்தியில் திடீரென எதிர்ப்பு கிளம்பியது. முன்னர் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு தாமே வலியச் சென்று நலம் விசாரித்தார். அப்போது பாஜக.,வினர் பலரும் புருவத்தை உயர்த்தினர். திமுக., பாஜக., கூட்டணி ஏற்படப் போகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதன் பின்னர்தான் திமுக.,வினர் மோடிக்கு எதிராக பல மோசமான போராட்டங்களை நடத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் காவிரிப் போராட்டத்தை தீவிரமாக நடத்தினர்.

காவிரி போராட்டம் சென்னையில் நடைபெற்ற போது, சென்னைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சிக்கு வந்தார் மோடி. அப்போது கோபேக் மோடி என ஹேஷ் டேக் இட்டு, திமுக.,வினர் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். அது பாஜக.,வினருக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காட்சி அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் இத்தகைய பிரசாரங்கள் முன்னெடுக்கப் படுவது குறித்து தனது வருத்தத்தை மோடி சிலரிடம் பகிர்ந்து கொண்டு, தமிழகம் ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதனை முன்னிட்டே, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பாட்டில், தமிழகத்தில் உள்ள சிலரின் துணையுடன், பத்திரிகை முதலாளிகள், ஊடகப் புள்ளிகளை அழைத்து, தில்லிக்குச் சென்று மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தப் பட்டதாம்.

இந்நிலையில் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னைக்கு பிரதமர் மோடி வருவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்று தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories