மிரட்டும் மழை: சபரிமலைக்கு வராதீங்க: கெஞ்சும் அதிகாரிகள்!

05 Aug10 Kerala rain - 2026

பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையில் கேரளம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்நிலையில், மீண்டும் கனமழை கேரளத்தை மிரட்டி வருகிறது. தென் கேரளம் தொடங்கி வடகேரளம் வரை, வெள்ளத்தால் பாதிக்காத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு மாநிலம் முழுதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. குறிப்பாக எர்ணாகுளம், பத்தனம்திட்ட உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

kerala flood - 2026

இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், பத்தனம்திட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, அவை தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்நிலையில், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பத்தனம்திட்ட மாவட்டத்தில் பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா, அனத்தோடு அணைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பம்பா நதி கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிரப்புத்திரி நடைதிறப்புக்கு தரிசிக்க வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories