மிரட்டும் மழை: சபரிமலைக்கு வராதீங்க: கெஞ்சும் அதிகாரிகள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

05 Aug10 Kerala rain - 2026

பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையில் கேரளம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்நிலையில், மீண்டும் கனமழை கேரளத்தை மிரட்டி வருகிறது. தென் கேரளம் தொடங்கி வடகேரளம் வரை, வெள்ளத்தால் பாதிக்காத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு மாநிலம் முழுதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. குறிப்பாக எர்ணாகுளம், பத்தனம்திட்ட உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

kerala flood - 2026

இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், பத்தனம்திட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, அவை தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்நிலையில், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பத்தனம்திட்ட மாவட்டத்தில் பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா, அனத்தோடு அணைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பம்பா நதி கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிரப்புத்திரி நடைதிறப்புக்கு தரிசிக்க வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img