April 26, 2025, 11:41 PM
30.2 C
Chennai

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: பரவும் வதந்திகள்!

புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  மருத்துவ குறிப்பு வெளியிட்டது.

உடல்நலம் பாதிக்கப்  பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடந்த 9 வாரங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சையில் உள்ளார். நேற்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்றும்  11 மணியளவில் மீண்டும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாகக் கூறியுள்ளது. உயிர்காக்கும் கருவிகளின் துணையோடு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், வாஜ்பாயின் உறவினர்கள் என மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  தொண்டர்கள் மருத்துவ மனை முன் குவிந்து வருகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தில்லிக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ:  உலக வானிலை நாள் 2025

இதனிடையே திரிபுரா ஆளுநர் போட்ட டிவிட்டர் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிப்பதாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு கண்டனம் எழுந்தது. வாஜ்பாய் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்ஸ் அப் குழுக்களில் பலரும் வதந்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Topics

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories