முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

Published:

04 July20 Mullai periyaar - 2026

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும்,  நீர் மட்டம் சீராக இருப்பதை  தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, கேரளத்தில் நிலவும் வெள்ளச் சூழலில், முல்லைப் பெரியாறு அணையை 139 அடியாக வைத்திருக்க வேண்டும் என்றும் 142 அடிக்கு உயர்த்த வேண்டாம் என்றும், கூடுதலாக தண்ணீரைத் திறந்து விடுமாறும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடிதம் மூலம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், நீர்மட்டம் 142 அடிக்கு மிகாமல் தொடர்ந்து கண்காணிப்பதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு முடிந்தவரை அதிக பட்ச தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க போதிய ஒத்துழைப்பை தமிழக அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img