கேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

edappadi pazanisamy - 2026

சென்னை: கனமழை மற்றும் அணைகள் திறக்கப் பட்டதால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் மேலும் ரூ. 5 கோடி  நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளத்துக்கு துவக்கத்திலேயே முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 கோடி  நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழக மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கேரளத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெறும்.

தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும். 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பிவைக்கப்படும்.

மேலும், வேட்டிகள், கைலிகள் 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழுக்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்படும். இப்பணிகளை ஒருங்கிணைக்க, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையின் கீழ், 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்ற உத்தரவிட்டப் பட்டுள்ளது என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img