நேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,!

Published:

Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar Guruji and Deen Dayal Upadhyaya - 2026

நீங்கள் எப்படி பிரதமா் பதவிக்கு வந்தீா்கள்? உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரதமராகும் கனவு இருந்ததா?

இந்தக் கேள்வி வாஜ்பாயிடம் அவா் முதன்முறையாக பிரதமா் பதவியேற்ற பிறகு ‘நயி துனியா’ என்ற பத்திாிகையில்… ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது.

அதற்கு வாஜ்பாய் அளித்த பதில் :

நான் அப்போது சங்க பிரசாரகராக இருந்தேன். குருஜி கோல்வல்கா் (தலைவராக) சா் சங்கசாலக்காக இருந்தாா். எனக்கோ அல்லது ஆா்எஸ்எஸ் – சங்கத்திற்கோ ஒரு கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் ஒரு துளியும் இருந்ததில்லை. சங்கப் பணிகளை மட்டுமே மட்டுமே பாா்பபோம்.

1948இல் மகாத்மா காந்தி கொலை செய்யபட்டாா். அவா் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாகக் கூறி, இயக்கம் தடை செய்யப் பட்டது. உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ததில், மகாத்மாவின் கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று தீா்ப்பு வழங்கியது.

Atal Bihari Guruji - 2026

ஆனால் நேரு தலைமையில் இருந்த நாடாளுமன்றம் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடா்பு உண்டு என்று தீா்மானம் நிறைவேற்றியது. அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களுமே உறுப்பினர்களாக இருந்தார்கள்.  இந்தத் தீா்மானத்தை எதிா்த்துக் குரல் கொடுக்க அப்போது யாருமே அங்கு இல்லை.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இதை செய்தித்தாளில் படித்துக் கொண்டிருந்த குருஜி கூறினாா்… இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய, லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட ஐந்து பேரை ஆர்.எஸ்.எஸ்., பணிகளை கவனிப்பதில் இருந்து விடுவித்து, இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்; ஆவன செய்யுங்கள் என்று கூறி அரசியலுக்கு அனுப்பி வைத்தாா்.

 Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar 'Guruji' and Deen Dayal Upadhyaya
Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar ‘Guruji’ and Deen Dayal Upadhyaya

அன்று தொடங்கியது எங்கள் யாத்திரை. இனி நிற்காது. தொடா்ந்து சென்று தன் லட்சியத்தை அடையும்.

ஆர்.எஸ்.எஸ்.,  ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்குவதே இல்லை. இன்று மிகக் குறைந்த மெஜாாிடியாக இருந்தாலும் முழு மெஜாாிடியுடன் நாம் நம் லட்சியத்தை அடைவோம்… என்றார் வாஜ்பாய்.

–  உமாசங்கா்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img