காரோட்டிய இளைஞருக்கு மாரடைப்பு! காப்பாற்றிய கான்ஸ்டபிளுக்கு குவியும் பாராட்டு!

Published:

maharashtra traffic cop saved the life of a man who suffered heart attack while driving - 2026

மகாராஷ்டிராவில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய கான்ஸடபிளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் பத்கா பகுதியில் இருந்து கார் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.  காரை நிகில் தம்போலே (வயது 23) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.  பின் இருக்கையில் வயது முதிர்ந்த அவரது தந்தையார் அமர்ந்து இருந்துள்ளார்.

அந்த கார் காரிகாவன் என்ற பகுதியருகே மதியம் 12.30 மணி அளவில், சுங்க சாவடி ஒன்றின் அருகே வந்தபோது தம்போலுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கல்வா போக்குவரத்து பிரிவில் போக்குவரத்து கான்ஸ்டபிளாக இருந்த பண்டாரிநாத் (வயது 35) என்பவர் கண்டார்.

அவர் உடனடியாக அங்குச் சென்று தம்போலை பின் இருக்கைக்கு கொண்டு சென்று அமரச் செய்துள்ளார்.  பின்னர் சற்றும் காத்திருக்காமல் காரை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று தம்போலை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதில் சிகிச்சைக்குப் பின் தம்போல் உடல்நிலை சீரடைந்துள்ளது.  கான்ஸ்டபிள் சமயத்தில் செயல்பட்டதற்காக அவருக்கு உயரதிகாரியின் பாராட்டு கிடைத்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img