அழகிரி- ஸ்டாலின் மோதல்… அவர்களின் உட்கட்சி பிரச்னை: நழுவிய எடப்பாடியார்

Published:

11 Aug27 CM edapadi e1535649894796 - 2026
153562284226630 - 2026

ஸ்டாலின் – அழகிரி மோதல் என்பது, அவர்களின் உட்கட்சிப் பிரச்னை என்று நழுவினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது பாமக.,வினரால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  48 புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, பாமகவினரால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அழகிரி-ஸ்டாலின் மோதல் அவர்களின் உட்கட்சி பிரச்னை, திமுக போல், அதிமுக அல்ல! தாங்கள் ஜனநாயக முறைப்படி செயல் படுபவர்கள் என்றார் முதலமைச்சர்.

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதம் அடைந்த பகுதி இன்னும் முன்று தினங்களில் சரி செய்யப்படும் என்றும், அணை முழுமையாக உடைந்துவிடும் என்று கூறப்படுவது தவறான தகவல் என்றும் கூறினார் முதல்வர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img