February 20, 2026, 11:45 AM
30 C
Chennai

ஒழுக்கம் என்ற பேச்செடுத்தாலே… ஜனநாயக விரோதம்னு சொல்றாங்க… மோடி வருத்தம்!

modi venkaiah book release - 2026

குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு, வெங்கய்ய நாயுடு தமது அனுபவங்களைத் தொகுத்து,  ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

modi venkaiah book release1 - 2026

“மூவிங் ஆன்… மூவிங் ஃபார்வர்டு – எ இயர் இன் ஆஃபீஸ்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மிகவும் ஒழுங்கானவர் வெங்கய்ய நாயுடு! ஒழுக்கத்துடன் இருங்கள் என்று நாம் சொல்வதே கூட ஜனநாயக விரோதமானது என்று கூறப்படும் நிலை தற்போது உள்ளது. ஒழுங்காக இருங்கள் என்று ஒருவர் சொன்னால், அவர் ஏதேச்சாதிகாரத்துடன் இருக்கிறார் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார்.

கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறார் வெங்கய்ய நாயுடு! அவர், எந்த வேலையைச் செய்தாலும் விடா முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார். தேசக் கட்டமைப்பில் அவர் தனது உறுதியையும் கடமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு விவசாயத்தின் மீது வெறி உண்டு. விவசாயிகள் நலனுக்காகவும், கிராம வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் வெங்கய்ய நாயுடுவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. சிறந்த பேச்சாளர், நல்ல குரல் வளம், நகைச்சுவை உணர்வு கொண்டவர் வெங்கய்ய நாயுடு என்றார் மோடி.

modi venkaiah book release3 - 2026

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, வேளாண்துறைக்கு தேவையான ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம்! எதிர்காலத்தில் வேளாண் துறையை லாபம் மிகுந்ததாக மாற்றாவிட்டால் மக்கள் அதனை கைவிட்டு வெளியேறி விடுவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஆக்கப்பூர்வமானதல்ல என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 COMMENTS

  1. திரு. மோடி சொல்லுவது சரிதான் . ஒழுக்கம் பற்றி பேசினால் அதை சர்வாதிகாரம் என்று மக்களின் மனதை மாற்றி விட்டார்கள் சிலர் அவர்களின் சுயலாபத்துக்காக.

  2. மாமியார் உடைத்தால் மண் செட்டி, மருமகள் உடைத்தால் பொன் செட்டி என்ற பழமொழி உண்மைதான். நம் பிரதமர் சரியாகத்தான் சொல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories