ஒழுக்கம் என்ற பேச்செடுத்தாலே… ஜனநாயக விரோதம்னு சொல்றாங்க… மோடி வருத்தம்!

modi venkaiah book release - 2026

குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு, வெங்கய்ய நாயுடு தமது அனுபவங்களைத் தொகுத்து,  ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

modi venkaiah book release1 - 2026

“மூவிங் ஆன்… மூவிங் ஃபார்வர்டு – எ இயர் இன் ஆஃபீஸ்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மிகவும் ஒழுங்கானவர் வெங்கய்ய நாயுடு! ஒழுக்கத்துடன் இருங்கள் என்று நாம் சொல்வதே கூட ஜனநாயக விரோதமானது என்று கூறப்படும் நிலை தற்போது உள்ளது. ஒழுங்காக இருங்கள் என்று ஒருவர் சொன்னால், அவர் ஏதேச்சாதிகாரத்துடன் இருக்கிறார் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார்.

கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறார் வெங்கய்ய நாயுடு! அவர், எந்த வேலையைச் செய்தாலும் விடா முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார். தேசக் கட்டமைப்பில் அவர் தனது உறுதியையும் கடமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு விவசாயத்தின் மீது வெறி உண்டு. விவசாயிகள் நலனுக்காகவும், கிராம வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் வெங்கய்ய நாயுடுவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. சிறந்த பேச்சாளர், நல்ல குரல் வளம், நகைச்சுவை உணர்வு கொண்டவர் வெங்கய்ய நாயுடு என்றார் மோடி.

modi venkaiah book release3 - 2026

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, வேளாண்துறைக்கு தேவையான ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம்! எதிர்காலத்தில் வேளாண் துறையை லாபம் மிகுந்ததாக மாற்றாவிட்டால் மக்கள் அதனை கைவிட்டு வெளியேறி விடுவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஆக்கப்பூர்வமானதல்ல என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 COMMENTS

  1. திரு. மோடி சொல்லுவது சரிதான் . ஒழுக்கம் பற்றி பேசினால் அதை சர்வாதிகாரம் என்று மக்களின் மனதை மாற்றி விட்டார்கள் சிலர் அவர்களின் சுயலாபத்துக்காக.

  2. மாமியார் உடைத்தால் மண் செட்டி, மருமகள் உடைத்தால் பொன் செட்டி என்ற பழமொழி உண்மைதான். நம் பிரதமர் சரியாகத்தான் சொல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories