ஒழுக்கம் என்ற பேச்செடுத்தாலே… ஜனநாயக விரோதம்னு சொல்றாங்க… மோடி வருத்தம்!

modi venkaiah book release - 2026

குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு, வெங்கய்ய நாயுடு தமது அனுபவங்களைத் தொகுத்து,  ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

modi venkaiah book release1 - 2026

“மூவிங் ஆன்… மூவிங் ஃபார்வர்டு – எ இயர் இன் ஆஃபீஸ்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மிகவும் ஒழுங்கானவர் வெங்கய்ய நாயுடு! ஒழுக்கத்துடன் இருங்கள் என்று நாம் சொல்வதே கூட ஜனநாயக விரோதமானது என்று கூறப்படும் நிலை தற்போது உள்ளது. ஒழுங்காக இருங்கள் என்று ஒருவர் சொன்னால், அவர் ஏதேச்சாதிகாரத்துடன் இருக்கிறார் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார்.

கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறார் வெங்கய்ய நாயுடு! அவர், எந்த வேலையைச் செய்தாலும் விடா முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார். தேசக் கட்டமைப்பில் அவர் தனது உறுதியையும் கடமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு விவசாயத்தின் மீது வெறி உண்டு. விவசாயிகள் நலனுக்காகவும், கிராம வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் வெங்கய்ய நாயுடுவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. சிறந்த பேச்சாளர், நல்ல குரல் வளம், நகைச்சுவை உணர்வு கொண்டவர் வெங்கய்ய நாயுடு என்றார் மோடி.

modi venkaiah book release3 - 2026

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, வேளாண்துறைக்கு தேவையான ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம்! எதிர்காலத்தில் வேளாண் துறையை லாபம் மிகுந்ததாக மாற்றாவிட்டால் மக்கள் அதனை கைவிட்டு வெளியேறி விடுவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஆக்கப்பூர்வமானதல்ல என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 COMMENTS

  1. திரு. மோடி சொல்லுவது சரிதான் . ஒழுக்கம் பற்றி பேசினால் அதை சர்வாதிகாரம் என்று மக்களின் மனதை மாற்றி விட்டார்கள் சிலர் அவர்களின் சுயலாபத்துக்காக.

  2. மாமியார் உடைத்தால் மண் செட்டி, மருமகள் உடைத்தால் பொன் செட்டி என்ற பழமொழி உண்மைதான். நம் பிரதமர் சரியாகத்தான் சொல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories