February 21, 2026, 8:59 PM
27.3 C
Chennai

ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

modi madhyapradesh - 2026

புது தில்லி: ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், இப்போது அறிவையும் இழந்துவிட்டது; நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இப்போது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்  பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆளும் மாநிலங்களை எதிரிகளைப் போல பார்த்தனர் என்று கூறினார். மேலும், நூறு ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சி, சிறு சிறு கட்சிகளிடம் நற்சான்றிதழ் கேட்டு நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்றார்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார்.

வாக்கு வங்கி அரசியல், இந்திய சமூகத்தை கரையான் போல் அரித்துவிட்டது என்று கூறிய அவர், தம் மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலரும் என்றார் உறுதியாக!

காங்கிரஸ் கட்சியால், நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியவில்லை. அது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை பிற நாடுகளா முடிவு செய்யும்? ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி, அறிவையும் இழந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமையாக மாறிவிட்டது என்று கூறி, தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை முன்னிறுத்தினார் மோடி.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories