ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

Published:

modi madhyapradesh - 2026

புது தில்லி: ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், இப்போது அறிவையும் இழந்துவிட்டது; நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இப்போது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்  பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆளும் மாநிலங்களை எதிரிகளைப் போல பார்த்தனர் என்று கூறினார். மேலும், நூறு ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சி, சிறு சிறு கட்சிகளிடம் நற்சான்றிதழ் கேட்டு நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்றார்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

வாக்கு வங்கி அரசியல், இந்திய சமூகத்தை கரையான் போல் அரித்துவிட்டது என்று கூறிய அவர், தம் மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலரும் என்றார் உறுதியாக!

காங்கிரஸ் கட்சியால், நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியவில்லை. அது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை பிற நாடுகளா முடிவு செய்யும்? ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி, அறிவையும் இழந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமையாக மாறிவிட்டது என்று கூறி, தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை முன்னிறுத்தினார் மோடி.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img