ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

modi madhyapradesh - 2026

புது தில்லி: ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், இப்போது அறிவையும் இழந்துவிட்டது; நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இப்போது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்  பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆளும் மாநிலங்களை எதிரிகளைப் போல பார்த்தனர் என்று கூறினார். மேலும், நூறு ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சி, சிறு சிறு கட்சிகளிடம் நற்சான்றிதழ் கேட்டு நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்றார்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார்.

வாக்கு வங்கி அரசியல், இந்திய சமூகத்தை கரையான் போல் அரித்துவிட்டது என்று கூறிய அவர், தம் மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலரும் என்றார் உறுதியாக!

காங்கிரஸ் கட்சியால், நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியவில்லை. அது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை பிற நாடுகளா முடிவு செய்யும்? ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி, அறிவையும் இழந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமையாக மாறிவிட்டது என்று கூறி, தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை முன்னிறுத்தினார் மோடி.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories