December 5, 2025, 6:50 PM
26.7 C
Chennai

ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

modi madhyapradesh - 2025

புது தில்லி: ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ், இப்போது அறிவையும் இழந்துவிட்டது; நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இப்போது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்  பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.

மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பாஜக ஆளும் மாநிலங்களை எதிரிகளைப் போல பார்த்தனர் என்று கூறினார். மேலும், நூறு ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சி, சிறு சிறு கட்சிகளிடம் நற்சான்றிதழ் கேட்டு நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்றார்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார்.

வாக்கு வங்கி அரசியல், இந்திய சமூகத்தை கரையான் போல் அரித்துவிட்டது என்று கூறிய அவர், தம் மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலரும் என்றார் உறுதியாக!

காங்கிரஸ் கட்சியால், நாட்டுக்குள் கூட்டணி வைக்க முடியவில்லை. அது நாட்டுக்கு வெளியே கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை பிற நாடுகளா முடிவு செய்யும்? ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி, அறிவையும் இழந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமையாக மாறிவிட்டது என்று கூறி, தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை முன்னிறுத்தினார் மோடி.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories