தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

Published:

contract sign oil - 2026

புது தில்லி: தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தில்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் உடன்பாடு கையெழுத்தானது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

வேதாந்தா நிறுவனம் தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உடன்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் மூன்றாவது இடமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமத்தை ஓ.என்.ஜி.சி. பெற்றுள்ளது.

முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கண்டித்துப் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. எனவே அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img