அமெரிக்க எச்சரிக்கை அம்பேல்..! மோடி – புடின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

putin modi - 2026

புது தில்லி: அமெரிக்க எச்சரிக்கையை புறம் தள்ளிய இந்தியா, ரஷ்யாவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டது. மோடி-புடின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

வெள்ளிக்கிழமை இன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்தித்தினர்.  தில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் இந்த சந்திப்பு நடந்தது. பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் அங்குவைத்துதான் மோடி சந்திப்பது வழக்கம்.

நேற்று இந்தியா வந்த புதினை கட்டித் தழுவி வரவேற்ற மோடி, இன்று புடினைச் சந்தித்து அதிகாரபூர்வமாக ஒப்பந்தங்கள் குறித்துப் பேசினார். இந்த சந்திப்பில் மொத்தம் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இருநாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் உடனிருந்தனர்.

விண்வெளித் துறை, அணு சக்தித் துறை, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மொத்தம் 20 ஒப்பந்தம் கையெழுத்தாகின.

மேலும், ஏவுகணை குறித்து ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதாரத் தடை விதிக்க்கப் படும் என்று இந்தியாவை அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால் அதை புறம் தள்ளிய மோடி, ரஷ்யாவுடனான நெருக்கத்தை வெளிப்படுத்த இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இதை அடுத்து, எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஏவுகணை இந்திய பாதுகாப்புத் துறைக்கு வலு சேர்க்கும். சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகின இந்த ஒப்பந்தம்,  அமெரிக்க எச்சரிக்கையை மீறி மேற்கொள்ளப் பட்டுள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories