போதையில் தகராறு; ஆடைகளைக் கழற்றி போலீசாருடன் ரகளை! போலீஸார் மீதே புகார் கொடுத்த மாடல் பெண்!

Model Oshiwara - 2026

மும்பை: டேராடூனைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் மேகா சர்மா. இவர் ஒரு மாடலிங் துறையில் இருந்து வருகிறார். மும்பையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருந்து வரும் இவர், கடந்த நான்கு நாட்களாக டிவிட்டர், செய்தித் தளங்களில் செய்தியாகிப் போனார். காரணம், போதை தலைக்கு ஏறி, இவர் செய்த செயல்கள்!

மேகா சர்மா குடியிருப்பதும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்டான லோகண்ட்வாலா காம்ப்ளெக்ஸ். செக்யூரிட்டிகள் கண்காணிப்பு எப்போதும் உண்டு. மது அருந்தும் பழக்கம் கொண்ட மேகா சர்மா, கடந்த அக்.25ம் தேதி இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு இன்டர்காமில் செக்யூரிட்டியை அழைத்திருக்கிறார். அந்த நேரத்தில் அலோக் என்பவர் இரவுப் பணியில் இருந்துள்ளார்.அவர் போனில் “என்ன விஷயம்?” என்று கேட்டதற்கு “ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி வா” என்று கூறியிருக்கிறார். அதற்கு அலோக், “இரவு நேர டியூட்டியில் இருக்கிறேன், இப்போது போக முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் போதையிலிருந்த மேகா, ஆவேசத்துடன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, அலோக்கை சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து வாய்த் தகராறு முற்றி, அலோக்கின் கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, போலீஸுக்கு போன் செய்துள்ளார். ஒரு கான்ஸ்டபிள் விரைந்து வந்துள்ளார். அவரது போதை நிலை கண்ட கான்ஸ்டபிள், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக பேசியுள்ளார். தன்னை அடித்துவிட்டதாக அலோக் கூறியதும், மேகாவைப் பார்த்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வா என்று கூறியுள்ளார் கான்ஸ்டபிள். ஆனால், ஒரு பெண்ணை இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல சட்டத்தில் இடமில்லை என்றும், வீட்டில் விசாரணை வேண்டுமானால் நடத்தலாம் என்றும் அவர் கூற, மேற்கொண்டு கான்ஸ்டபிளுடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

உங்களுடன் ஒரு பெண் போலீசும் இல்லை, எனவே, நான் உங்களுடன் இப்போது வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, மாடிப் பகுதியில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், கான்ஸ்டபிள் அவரை மேலே செல்ல அனுமதிக்காமல் தடுக்கவே கோபம் அடைந்த மேகா, அந்த கான்ஸ்டபிளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் மேலாடையைக் கழற்றத் தொடங்கினார்.

இதனால் அந்த கான்ஸ்டபிளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மற்ற செக்யூரிடிகளும் வர பிரச்னை பெரிதாகியுள்ளது.

இந்நிலையில், மேகா மீது போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் பதிவு செய்யப் பட்டது. அதேபோல், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மேகா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

இது குறித்து மேகா சர்மா செய்தியாளர்களிடம் கூறியபோது, என்னிடம் செக்யூரிடி தவறாக நடக்க முயன்றார். போலீஸும் வேடிக்கை பார்த்தது. தொடர்ந்து என்னை அந்த இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி தகராறு செய்தனர். எனவே வேறு வழி தெரியாமல், நான் மேலாடையைக் கழற்றினேன். கான்ஸ்டபிளின் நடவடிக்கை குறித்து போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் என் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள். குற்றவியல் சட்ட முறை 160ன் கீழ், பெண்கள் நேரடியாக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. அவரது குடும்பத்தார் முன்னிலையில் விசாரணை செய்யலாம்… என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் சூடாகக் கிளம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories