December 5, 2025, 6:51 PM
26.7 C
Chennai

போதையில் தகராறு; ஆடைகளைக் கழற்றி போலீசாருடன் ரகளை! போலீஸார் மீதே புகார் கொடுத்த மாடல் பெண்!

Model Oshiwara - 2025

மும்பை: டேராடூனைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் மேகா சர்மா. இவர் ஒரு மாடலிங் துறையில் இருந்து வருகிறார். மும்பையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருந்து வரும் இவர், கடந்த நான்கு நாட்களாக டிவிட்டர், செய்தித் தளங்களில் செய்தியாகிப் போனார். காரணம், போதை தலைக்கு ஏறி, இவர் செய்த செயல்கள்!

மேகா சர்மா குடியிருப்பதும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்டான லோகண்ட்வாலா காம்ப்ளெக்ஸ். செக்யூரிட்டிகள் கண்காணிப்பு எப்போதும் உண்டு. மது அருந்தும் பழக்கம் கொண்ட மேகா சர்மா, கடந்த அக்.25ம் தேதி இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு இன்டர்காமில் செக்யூரிட்டியை அழைத்திருக்கிறார். அந்த நேரத்தில் அலோக் என்பவர் இரவுப் பணியில் இருந்துள்ளார்.அவர் போனில் “என்ன விஷயம்?” என்று கேட்டதற்கு “ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி வா” என்று கூறியிருக்கிறார். அதற்கு அலோக், “இரவு நேர டியூட்டியில் இருக்கிறேன், இப்போது போக முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் போதையிலிருந்த மேகா, ஆவேசத்துடன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, அலோக்கை சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து வாய்த் தகராறு முற்றி, அலோக்கின் கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, போலீஸுக்கு போன் செய்துள்ளார். ஒரு கான்ஸ்டபிள் விரைந்து வந்துள்ளார். அவரது போதை நிலை கண்ட கான்ஸ்டபிள், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக பேசியுள்ளார். தன்னை அடித்துவிட்டதாக அலோக் கூறியதும், மேகாவைப் பார்த்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வா என்று கூறியுள்ளார் கான்ஸ்டபிள். ஆனால், ஒரு பெண்ணை இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல சட்டத்தில் இடமில்லை என்றும், வீட்டில் விசாரணை வேண்டுமானால் நடத்தலாம் என்றும் அவர் கூற, மேற்கொண்டு கான்ஸ்டபிளுடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

உங்களுடன் ஒரு பெண் போலீசும் இல்லை, எனவே, நான் உங்களுடன் இப்போது வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, மாடிப் பகுதியில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், கான்ஸ்டபிள் அவரை மேலே செல்ல அனுமதிக்காமல் தடுக்கவே கோபம் அடைந்த மேகா, அந்த கான்ஸ்டபிளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் மேலாடையைக் கழற்றத் தொடங்கினார்.

இதனால் அந்த கான்ஸ்டபிளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மற்ற செக்யூரிடிகளும் வர பிரச்னை பெரிதாகியுள்ளது.

இந்நிலையில், மேகா மீது போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் பதிவு செய்யப் பட்டது. அதேபோல், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மேகா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இது குறித்து மேகா சர்மா செய்தியாளர்களிடம் கூறியபோது, என்னிடம் செக்யூரிடி தவறாக நடக்க முயன்றார். போலீஸும் வேடிக்கை பார்த்தது. தொடர்ந்து என்னை அந்த இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி தகராறு செய்தனர். எனவே வேறு வழி தெரியாமல், நான் மேலாடையைக் கழற்றினேன். கான்ஸ்டபிளின் நடவடிக்கை குறித்து போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் என் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள். குற்றவியல் சட்ட முறை 160ன் கீழ், பெண்கள் நேரடியாக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. அவரது குடும்பத்தார் முன்னிலையில் விசாரணை செய்யலாம்… என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் சூடாகக் கிளம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories