சபரிமலை ஐயப்பஸ்வாமி நடை திறப்பு! என்றும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள்!

sabarimalai2 - 2026

பம்பா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது! இன்றைய பூஜைகளுக்குப் பின்னர், இரவு அடைக்கப்படுகிறது.

கேரள அரசின் தீவிர முயற்சியால், பெண்கள் சபரிமலை சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டால், பிரச்னை ஏற்படக் கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் மற்றும் போலீஸ் நண்பர்கள் என கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிறப்பு பணியாக சபரிமலை சந்நிதியை ஒட்டி நிறுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் சபரிமலைக்கு வராமல் தவிர்த்து விட்டனர். ஆனால், கம்யூனிஸ தொண்டர் ஒருவர் தன் மனைவி இரு குழந்தைகளை வற்புறுத்தி அழைத்து வந்த நிலையில், அவரும் பம்பையுடன் நின்றுவிட்டார். அஞ்சு என்ற 30வயதுப் பெண், இது குறித்துக் கூறுகையில், தம்மால் தன் கணவரின் வற்புறுத்தலுக்காக சபரிமலை மேலே செல்ல மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றார். அவர் பம்பையில் பாதுகாப்புடன் நின்றுவிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பால ராம வர்மாவின் பிறந்தநாளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நேற்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது. இதை அடுத்து பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த நிகழ்வை ஒட்டி, வரலாறு காணாத அளவில், 2300 போலீசார், 20 பேர் கொண்ட கமாண்டோ படை, 15 மகளிர் போலீசார் அடங்கிய சிறப்புப் படை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக பெண் போலீஸாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு கோரி சில பெண்கள் பம்பாவில் முகாமிட்ட நிலையில், மலைப்பாதையை மறித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் இன்று இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பம்பை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.,

ஆனால், பக்தர்களுக்குப் போதுமான குடிநீர், கழிவறை, ஓய்விடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories