சபரிமலை ஐயப்பஸ்வாமி நடை திறப்பு! என்றும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள்!

sabarimalai2 - 2026

பம்பா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது! இன்றைய பூஜைகளுக்குப் பின்னர், இரவு அடைக்கப்படுகிறது.

கேரள அரசின் தீவிர முயற்சியால், பெண்கள் சபரிமலை சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டால், பிரச்னை ஏற்படக் கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் மற்றும் போலீஸ் நண்பர்கள் என கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிறப்பு பணியாக சபரிமலை சந்நிதியை ஒட்டி நிறுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் சபரிமலைக்கு வராமல் தவிர்த்து விட்டனர். ஆனால், கம்யூனிஸ தொண்டர் ஒருவர் தன் மனைவி இரு குழந்தைகளை வற்புறுத்தி அழைத்து வந்த நிலையில், அவரும் பம்பையுடன் நின்றுவிட்டார். அஞ்சு என்ற 30வயதுப் பெண், இது குறித்துக் கூறுகையில், தம்மால் தன் கணவரின் வற்புறுத்தலுக்காக சபரிமலை மேலே செல்ல மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றார். அவர் பம்பையில் பாதுகாப்புடன் நின்றுவிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பால ராம வர்மாவின் பிறந்தநாளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நேற்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது. இதை அடுத்து பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இந்த நிகழ்வை ஒட்டி, வரலாறு காணாத அளவில், 2300 போலீசார், 20 பேர் கொண்ட கமாண்டோ படை, 15 மகளிர் போலீசார் அடங்கிய சிறப்புப் படை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக பெண் போலீஸாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு கோரி சில பெண்கள் பம்பாவில் முகாமிட்ட நிலையில், மலைப்பாதையை மறித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் இன்று இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பம்பை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.,

ஆனால், பக்தர்களுக்குப் போதுமான குடிநீர், கழிவறை, ஓய்விடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories