சபரிமலையை நாசம் செய்ய நினைப்பவர்களை அனுமதிக்க மாட்டோம்!

Published:

sabarimalai rss workers1 - 2026

பம்பை: “வதந்திகளை நம்ப வேண்டாம்! அமைதியாக இருக்கவும்! நாசம் செய்ய நினைப்பவர்களை அனுமதிக்க மாட்டோம்”
என்று, சபரிமலை சன்னிதானத்தில் இருந்து மாநில ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் வல்சன் திலகனெரி கூறியுள்ளார்.

சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில், பெண்களை எப்படியாவது அழைத்துச் சென்று சபரிமலையின் நடைமுறைகளை மீறிவிட வேண்டும் என்று பிடிவாதமாக செயல்படுகிறது மாநில அரசு. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து இயக்கங்கள் சபரிமலையில் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டு, பெண்களை அனுமதிக்காமல் தடுத்து வருகிறது.

sabarimalai rss workers - 2026

இதனிடையே, சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு விஷயத்தில் தடுப்பு அரணாக இருந்து செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக., உள்ளிட்ட இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தாங்கள் விழிப்புடன் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

நேற்றிலிருந்து சபரிமலையில் இருக்கும் பாஜக மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் ரமேஷ், கம்யூனிஸ்ட்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு பலமுறை இலக்கான கண்ணூரைச் சேர்ந்த வல்சன் உள்ளிட்டோர் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img