சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

sabarimalai6 baktas - 2026மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதன் பின்னரே சபரிமலையில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸாரால் நிலையைக் கட்டுப் படுத்த இயலாத நிலையில், மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஸ்ரீவல்ஸன் போலீஸாரின் மைக்கிலேயே நிலைமையை எடுத்துச் சொல்லி, பக்தர்களை அமைதிப் படுத்தி, மீண்டும் அங்கே அமைதி நிலவச் செய்தார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் சந்நிதானத்தில் வழிபாடு நடத்தினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஐயப்பன் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் முதல் முறையாக 50 வயது கடந்த பெண் காவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

sabarimalai baktas2 - 2026இந்நிலையில் இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் பக்தர்களில் ஒரு பிரிவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சூரில் இருந்து வந்த கிரிஜா, சுஜாதா ஆகிய 2 பெண்களைச் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கோவிலுக்குள் விட மறுத்தனர். ஆனால், காவல் துறையினர் விசாரித்ததில் அவர்கள் இருவரும் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் என்பது தெரிந்தது. இதை அடுத்து ஒரு பெண் கோவிலுக்குள் சென்றார். இன்னொருவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு அங்கேயே நின்றுவிட்டார்.

sabarimalai4 - 2026

பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும் பேருந்துகள் இயக்கத்தை மாநில அரசு நிறுத்தி விட்டதால், சபரிமலைக்கு வந்த ஐயப்ப பக்தர்கள், நிலக்கல்லில் இருந்து பம்பைக்கான 20 கி.மீ தொலைவை நடந்து சென்றே கடந்தனர்.

nilakkal to pamna - 2026

மேலும் ஒரு நாள் பூஜை என்றாலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்த போதிலும், பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் செய்யப் படவில்லை. நீர் நிலையம் பூட்டப் பட்டிருந்தது. தண்ணீர் தொட்டிகளில் ஒரு சொட்டு குடிநீரும் இருக்கவில்லை. குழாய்கள் நீர் வரத்தின்றி காற்றாடின. இதனால் பக்தர்கள் பெரும் அவதியுற்றனர்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

இந்நிலையில், இன்றைய வழிபாட்டுக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று இரவு 10 மணிக்குச் சாத்தப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories