பாஜக., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் சோதனை

Published:

Janardhana Reddy - 2026

பாஜக., முன்னாள் அமைச்சரும் கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டி வீட்டில் கர்நாடக மாநில மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகத்தில், அம்பிதந்த் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.600 கோடி அளவுக்கு சங்கிலித் தொடர் மார்க்கெடிங் முறையில் முதலீட்டை ஏமாற்றி விட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அமலாக்கத் துறை இந்த முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அம்பிதந்த் நிறுவனர் சையது அகமது பரீத், கர்நாடகத்தில் பாஜக., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி மூலம் ரூ. 20 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றாராம். இதற்காக ரூ. 2 கோடி பணம், 57கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ஜனார்த்தன ரெட்டியிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கூடுதல் ஆணையர் மஞ்சுநாத் சௌத்ரி தலைமையில் பல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img