திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது! நவ.13ல் சூரசம்ஹாரம்!

Published:

03 July26 Thiruchandur - 2026

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவ.13ம் தேதி நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாவது படை வீடாகக் கொண்டாடப் படுவது திருச்செந்தூர். அலைவாய், சீரலைவாய் எனும் பெயர்களுக்கு ஏற்ப, அலைகள் தோன்றி மறையும் கடற்கரை ஓரத்தில் அமையப் பெற்றுள்ள அழகுக் கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது.

இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி ஆறு நாள் சஷ்டி விரதத்தைத் தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கோயிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டனர்.

கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், ஐந்தரை மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளல் என்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img