மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரவேற்பு

Published:

ஸ்ரீநகர்:

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்படாத திடீர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை பிரிவினைவாத தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமரின் லாகூர் பயணம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிவினைவாத தலைவரான சையது ஷா கிலானி… “இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், இரு தலைவர்களின் பேச்சுவார்த்தை முயற்சி வெற்றி பெற்றால், காஷ்மீர் பிரச்சினையை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும்” என்றார்.

புதிய ஹூரியத் அமைப்பின் தலைவர் மிர்வாய்ச் உமர் பரூக், “மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம், சாதகமான நடவடிக்கை. இந்தியா-பாகிஸ்தான் நெருங்கி வரும் எந்த ஒரு வாய்ப்பையும் காஷ்மீர் மக்கள் வரவேற்பார்கள்” என்றார்.

Related articles

Recent articles

spot_img