மோடியின் திடீர் விஜயம்: பாகிஸ்தான் வரவேற்பு

Published:

புது தில்லி:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணத்தை அந்நாடு வரவேற்றுள்ளது. இது மோடியின் நல்லெண்ண நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, மோடியின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இந்தியா பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடரும் என கூறினார்.

இந்த பயணம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அஜிஸ் சவுத்ரி கூறுகையில், இது மோடியின் நல்லெண்ண நடவடிக்கையாகும். இரு நாட்டு மக்கள் இடையே நேரடியாக தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் ஜனவரியில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பார்கள். இரு தலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. மோடி, ஷெரீப் இடையே, மனப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது என கூறினார்.

பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் . அண்டை நாடுகளுடன் நலலுறவு அவசியம் என கூறினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img