December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

சபரிமலை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிணரயி விஜயன் அழைப்பு!

binarayi vijayan - 2025

சபரிமலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நவ.15 வியாழக்கிழமை நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அத் தீர்ப்பினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தை பாஜக., அரசியல் ஆக்குகிறது என்றும், அது வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் பிணரயி விஜயன் கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக வரும் நவ.16 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

நவ.16 அன்று கோயில் நடை திறக்கப்பட உள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள சீராய்வு மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த ரஞ்சன் கோகாய் அமர்வு, சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22ல் விசாரிப்பதாக ஏற்கெனவே கூறிவிட்டதாகவும், அதற்கு முன் எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு தடை விதிக்கவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் மண்டல பூஜை சீசனுக்காக நடை திறக்கப்படும் நிலையில் பாஜக., போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே, நடை திறப்பதற்கு முன் சபரிமலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும், பாஜக., தற்போது சபரிமலை பாதுகாப்பு யாத்திரையை மேற்கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories