திராவிட தேசத்தை ஏற்றிப் போற்றும் சம்ஸ்க்ருத காவ்யம்!

dravidian seafarers - 2026

ஸம்ஸ்க்ருத இலக்கியங்கள் இரண்டு வகைப்பட்டது. கத்யம், பத்யம் எனப்படும் இவற்றில் பத்யம் முழுக்க செய்யுட்களால் ஆனது. கத்யம் உரைநடையில் ஆனது. இந்த இரண்டு வகையையும் கலந்து படைக்கப்பட்டது. “சம்பு காவ்யம்” எனப்படும். இதன் தோற்றம் பிற்காலத்தியது. தேனும் கற்கண்டும் கலந்தது போல் மிகுந்த சுவையுடையது சம்பு காவ்யம் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சம்பு காவ்யங்களில் முதன்மையானது த்ரிவிக்ரம பட்டரின் (915-959) நளசம்பூ ஆகும். மிகப் பிரபலமானது இராமாயண சம்புவும், பாரத சம்புவும் ஆகும். இராதாக்ருஷ்ண சம்பு, கங்காவதார சம்பு என, பலசம்பு காவ்யங்கள் தோன்றியுள்ளன. சம்பு காவ்யங்கள் பெரும்பாலானவை நீதிக் கருத்துக்களை மையமாகக் கொண்டவை. சம்பு காவ்யங்களில் வித்யாசமானது வேங்கடாத்வரின் விசுவகுணாதர்ஷ சம்பு காவ்யம்.

இவர் காஞ்சிபுரம் அருகில் உள்ள அரசாணிப் பாலை கிராமத்தில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அப்பய்ய தீக்ஷிதரின் மரபில் வந்த இவர் நூற்றிற்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை கிடைக்கவில்லை. இவர் எழுதிய நூலிலிருந்து நூலை எழுதிய காலம் 1637 என அறிய முடிகிறது. விசுவகுணாதர்ஷ சம்பு காவ்யத்தில் இரண்டு கந்தர்வர்களை பாரத தேசம் முழுவதும் பயணம் செய்ய வைத்து, தேசத்தின் முக்கிய நதிகள், புனிதத் தலங்களைப் பற்றிய விமர்சனங்களைச் செய்துள்ளார். இரண்டு பேரில் ஒருவன் விசுவாவசு. இவர் காண்பனவற்றில் எல்லாம் உள்ள நிறைகளை மட்டுமே கண்டு சொல்வார். மற்றவர் கிருசாது. இவர் காண்பனவற்றில் குறை தேடி ஆராய்ந்து வெளிப்படுத்துவார். இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களே இந்தக் காவ்யம்.

நாட்டில் உள்ள புண்ணிய நதிகள், புனித பூமிகளின் இரு பக்கங்களையும் பேசி உண்மையை உணர வைத்துள்ளார். சில இடங்களில் குணங்களைக் கூட குறையாகச் சொல்லியுள்ளார். இது விஷயமாக ஒரு கதை சொல்லப்படுகிறது. புனித விஷயங்களுக்கு மாசு கற்பித்ததால், இவரின் கண்கள் குருடாகி விட்டதாகவும், அதற்காக இவர் லக்ஷ்மீ ஸஹஸ்ரம் பாடி மீண்டும் கண் பார்வை பெற்றதாகவும் சொல்வர். எது எப்படியோ நமக்கு சிறந்த காவ்யம் கிடைத்துள்ளது.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

தர்ஷணம் என்றால் பார்த்தல், காட்டுதல், கண்ணாடி எனப் பல பொருள் உண்டு. குணம் என்றால் இயல்பு என்றும், விஷ்வ என்பதற்கு உலகம் என்றும் பொருள் கொண்டு பார்த்தால் உலக இயல்பைக் காட்டும் காவ்யம் எனப் பொருள் வரும்.

விசுவாவசுவும் கிருசாநுவும் விமானம் மூலம் இமயம் ஆரம்பித்து காசி, கங்கை, யமுனை, அயோத்தி, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் வழியாகப் பயணித்து தமிழகம் வந்து, சென்னை, காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், தஞ்சை அருகே பயணத்தை முடிக்கிறார்கள். இடையில் கண்ட காட்சிகளில் உள்ள குறையை கிருசாநு சொல்ல, அதை மறுத்து விசுவாவசு அதன் பெருமையையும், புனிதத் தன்மையையும் பேசுகிறான். நதிகள், நகரங்கள் தவிர வேத விற்பன்னர்கள், க்ஷத்ரியர்கள், சாஸ்திர அறிஞர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோ ரின் நிறைகுறைகளையும் பேசுகிறார்கள்.

காவ்யத்தில் உள்ள ஒவ்வொரு செய்யுளும், வரியும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவனவாகவே உள்ளன. இன்று சிலர் சொல்லும் குறைகளுக்குக் கூட விடைகள் இந்நூலில் உள்ளன. பாரத தேசத்தின் பெருமையை எடுத்துக் கூறும் அற்புத நூல். இந்நூலில் தமிழ் வேதமாய் நாலாயிர திவ்யப் பிரபந்தம் குறித்து விசுவாவசு சொல்லும் கருத்தை மட்டும் காண்போம்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

திராவிட மொழி எனப்படும் தமிழுக்கு இலக்கணம் அளித்தவர், அகத்திய மாமுனி. இவர் கடல் முழுவதையும் உள்ளங்கையில் எடுத்துப் பருகியவர். தமிழில் பற்பல நூல்களை எழுதியவர்கள் புலன்களை அடக்கி ஆண்ட சடகோபர் (நம்மாழ்வார்) போன்றவர்கள். நூல்களில் உள்ள செய்திகளை எடுத்துச் சொன்னவர்கள் மிகத் தூய்மையான ஆசாரியர்கள். இத்தகைய தமிழ் மொழியின் பெருமை, வாக்கினால் சொல்லி முடிக்க முடியாதது.

குறையை மட்டுமே கண்டு சொல்லும் கிருசாநுவால் கூட குறையுள்ள மனிதர்கள் பாரத மக்கள் எனச் சொல்ல முடியாது. வாழ்ந்த, நமது மூதாதையர்களின் பெருமையைப் படித்து, நாமும் அப்படி வாழ முயற்சிக்கலாமே!

கட்டுரை: – குச்சனூர் தி.கோவிந்தராஜ்

2 COMMENTS

  1. உரையிடையிட்ட செய்யுளான நளசம்பூ குறித்து அறிமுகம் அளித்துள்ள குச்சனூர் தி.கோவிந்தராசிற்குப் பாராட்டுகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

  2. அருமை.இது போன்ற இலக்கியக் கட்டுரைகளை
    வரவேற்கிறேன்
    R.Natarajan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories