December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

முறைப்படி விரதம் இருந்து இருமுடியுடன் வந்த சசிகலா டீச்சர் கைது! பிக்னிக் ஸ்பாட் ஆக்குவேன் எனக் கூறிய திருப்தி தேசாய்க்கு சிவப்புக் கம்பளம்!

sasikala teacher - 2025

முறைப்படி விரதமிருந்து ஐயப்ப தரிசனத்திற்காக சபரிமலை சென்ற “இந்து ஐக்கிய வேதி” (கேரள ஹிந்து முன்னணி) சசிகலா டீச்சர் (வயது 55) பினராயி அரசால் கைது செய்யப்பட்டு ரண்ணி போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் இன்று கேரளாவில் முழுஅடைப்பு நடத்தப் படுகிறது.

இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே பி சசிகலா சனிக்கிழமை இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சபரி மலைக்குச் செல்லும் வழியில் வெள்ளிக்கிழமை இரவு தடுக்கப்பட்ட அவர், சனிக்கிழமை இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சசிகலா திரும்பிச் செல்ல மறுத்து விட்டதாகவும் அதன் காரணத்தாலேயே கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிச் செல்வதாக சசிகலா போலீசாரிடம் கூறியுள்ளார் சம்ரக்ஷண சமிதி மாநில தலைவர் பிரித்திவி பால் மற்றும் பாஜக தலைவர் பி சுதீர் ஆகியோரும் பம்பையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சபரிமலைக்குச் சென்று போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று போலீசார் கருதியதே கைது செய்யப்படக் காரணம் என்கிறார்கள்.

சசிகலா தமக்கு 50 வயது நிறைவடைந்து விட்டது என்றும் தாம் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார் ஆனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடன் சசிகலா கூட்டத்தை கூட்டி, போராட தூண்டுவார் என்று போலீசார் கருதினர். அதன் காரணத்தாலேயே சசிகலாவை திரும்பிச் செல்லுமாறு வற்புறுத்தினர். ஆனால் சசிகலா மறுத்துவிட்டது எடுத்து அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது

சசிகலா அதன் பின்னர் ரண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சபரிமலையில் இதை அடுத்து பெரிய போராட்டம் அரங்கேற்றியது

இந்நிலையில் இன்று கேரளா முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது முழு கடையடைப்பு போராட்டமும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன, காவல் நிலையங் களுக்கு பேரணியாக சென்று மனு கொடுக்கும் போராட்டங்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.

tripti desai - 2025

இந்நிலையில், சபரிமலைக்கு பிக்னிக்காக வருவேன், சுற்றுலாத் தலம் போல் வருவேன். எனக்கு சபரிமலை ஐயப்பன் மீது நம்பிக்கை கிடையாது. இருமுடி கட்ட மாட்டேன். குருசாமி எல்லாம் கிடையாது என்றெல்லாம் கூறிக் கொண்டு, உள்நோக்கத்துடன் வந்த திருப்தி தேசாய் என்ற பெண்ணுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது கம்யூனிஸ்ட் அரசு. 

ஆனால், அந்த திருப்தி தேசாயால், கொச்சின் விமான நிலைய வாசலைக்கூட 13 மணி நேரமாக தாண்டக் கூட முடியவில்லை. வாடகை டாக்ஸி ஓட்டுநர்களும் திருப்தி தேசாயை அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர் . மேலும் எந்த ஒரு ஓட்டல் உரிமையாளர்களும் அறை தர மறுத்து விட்டனர். ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்தி இல்லாமல் திரும்பி செல்கிறேன் என்று கூறி மும்பைக்கு திரும்பினார் திருப்தி தேசாய். விமான நிலையம் எங்கும் பெண்கள் குழந்தைகளின் தொடர் சரணகோஷம் ஒலித்தது. அது மும்பை விமான நிலையத்திலும் எதிரொலித்தது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories