பிணரயி அரசுக்கு பின்னடைவு! கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன்!

Published:

surendran sabarimala - 2026

பத்தனம்திட்ட: சரணகோஷம் சொல்லி மலை ஏற முயன்றதாகக் கூறி கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

சபரிமலையில் சரண கோஷத்தைச் சொல்லி மலை ஏற முயன்ற பாஜக., மாநில பொதுச் செயலர் சுரேந்திரன், மற்றும் அவருடன் வந்த பக்தர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இருமுடி கட்டி மலை ஏற முயன்ற போது சரண கோஷம் சொல்லி சத்தமிட்டனர் என்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. காரணம், அது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதை அடுத்து கே.சுரேந்திரன் கொட்டாரக்கர கிளைச் சிறையிலும், உடன் கைதான பக்தர்கள் பூஜப்புர மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்ற போது, போலீஸார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img