
18 படி வழியாக செல்லவில்லை என்று பிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சபரிமலை சென்று வந்தது குறித்து பிந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் 2-வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளோம். ஆனால், இந்த முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறோம்.
நாங்கள் தரிசனம் செய்ய போலீஸார் உதவினார்கள். அதிகாலை 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தோம், அதன் பின் அங்கிருந்து எங்களை போலீஸார் சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.
சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள, விஐபிக்கள் செல்லும் பகுதி வழியாக அதிகாலை 3.30 மணிக்குச் சென்றோம்.
நாங்கள் செல்லும் போது அதிகமான எதிர்ப்பு ஏதும் இல்லை. குறைவான அளவுள்ள பக்தர்களே சரண கோஷம் போட்டு எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், நாங்கள் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தி திரும்பினோம் எனத் தெரிவித்தார்.

