18 படிகளில் ஏறிச் செல்லவில்லை: சபரிமலைக்குச் சென்ற பிந்து

Published:

bindu interview sabarimala - 2026

18 படி வழியாக செல்லவில்லை என்று பிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சபரிமலை சென்று வந்தது குறித்து பிந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் 2-வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளோம். ஆனால், இந்த முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறோம்.

நாங்கள் தரிசனம் செய்ய போலீஸார் உதவினார்கள். அதிகாலை 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தோம், அதன் பின் அங்கிருந்து எங்களை போலீஸார் சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.

சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள, விஐபிக்கள் செல்லும் பகுதி வழியாக அதிகாலை 3.30 மணிக்குச் சென்றோம்.

நாங்கள் செல்லும் போது அதிகமான எதிர்ப்பு ஏதும் இல்லை. குறைவான அளவுள்ள பக்தர்களே சரண கோஷம் போட்டு எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், நாங்கள் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தி திரும்பினோம் எனத் தெரிவித்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img