சபரிமலையில் நுழைந்த பெண்கள் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

bindu interview sabarimala - 2026

சபரிமலைக்கு சென்ற பிந்து, கனக துர்கா இருவரும் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு, நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்பு! கனக துர்கா அவரது உறவினர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் மனு தாக்கல் செய்தனர்..

சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக பக்தர்களின் எதிர்ப்பை மீறி தரிசனத்துக்காக சென்ற பிந்து கனகதுர்கா இருவரும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்

அதில் தங்களது உறவினர்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுவில் கூறியுள்ளனர்

நீதிமன்றம் அவர்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொண்டிருக்கிறது …

முன்னதாக சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் சபரி மலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். இதனால் பெண்கள் சிலர் கம்யூனிச பின்னணியில் கேரள கம்யூனிச அரசின் ஆதரவில் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக, அதன் ஆசாரங்களை குலைக்கும் வகையில் சென்றனர்

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை அடுத்து கேரளத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சபரி மலைக்கு சென்ற கனகதுர்கா என்ற பெண் தனது வீட்டுக்கு திரும்பிய போது இரு தினங்களுக்கு முன் அவரது மாமியாரால் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது

ஆனால் கனகதுர்காவே அவரது மாமியாரை தாக்கி காயப்படுத்தியதாகவும் வேண்டுமென்றே பொய்ப் புகார் கொடுத்ததாகவும், இது கேரள கம்யூனிஸ்ட் அரசின் பின்னணியில் போலீசாரின் ஆலோசனையில் அவர்கள் ஏற்பாட்டில் இவ்வாறு புகார் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வாக பிந்து கனகதுர்கா இருவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்

சபரிமலை விவகாரத்தில் கேரள தேவசம் போர்டும் பக்தர்கள் தரப்பும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தபோது அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்.

கோயில் நடை திறக்க சில நாட்களே இருந்த நிலையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய போது அதனை ஏற்க மறுத்து வேறொரு நாளில் விசாரிப்பதாக ஒத்திவைத்தது

ஆனால் பெண்கள் இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அவசர வழக்காக மனுவை விசாரிக்க கூறியபோது அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

Topics

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Entertainment News

Popular Categories