சபரிமலையில் நுழைந்த பெண்கள் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

bindu interview sabarimala - 2026

சபரிமலைக்கு சென்ற பிந்து, கனக துர்கா இருவரும் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு, நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்பு! கனக துர்கா அவரது உறவினர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் மனு தாக்கல் செய்தனர்..

சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக பக்தர்களின் எதிர்ப்பை மீறி தரிசனத்துக்காக சென்ற பிந்து கனகதுர்கா இருவரும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்

அதில் தங்களது உறவினர்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுவில் கூறியுள்ளனர்

நீதிமன்றம் அவர்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொண்டிருக்கிறது …

முன்னதாக சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் சபரி மலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். இதனால் பெண்கள் சிலர் கம்யூனிச பின்னணியில் கேரள கம்யூனிச அரசின் ஆதரவில் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக, அதன் ஆசாரங்களை குலைக்கும் வகையில் சென்றனர்

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை அடுத்து கேரளத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சபரி மலைக்கு சென்ற கனகதுர்கா என்ற பெண் தனது வீட்டுக்கு திரும்பிய போது இரு தினங்களுக்கு முன் அவரது மாமியாரால் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது

ஆனால் கனகதுர்காவே அவரது மாமியாரை தாக்கி காயப்படுத்தியதாகவும் வேண்டுமென்றே பொய்ப் புகார் கொடுத்ததாகவும், இது கேரள கம்யூனிஸ்ட் அரசின் பின்னணியில் போலீசாரின் ஆலோசனையில் அவர்கள் ஏற்பாட்டில் இவ்வாறு புகார் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வாக பிந்து கனகதுர்கா இருவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்

சபரிமலை விவகாரத்தில் கேரள தேவசம் போர்டும் பக்தர்கள் தரப்பும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தபோது அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்.

கோயில் நடை திறக்க சில நாட்களே இருந்த நிலையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய போது அதனை ஏற்க மறுத்து வேறொரு நாளில் விசாரிப்பதாக ஒத்திவைத்தது

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

ஆனால் பெண்கள் இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அவசர வழக்காக மனுவை விசாரிக்க கூறியபோது அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Entertainment News

Popular Categories