December 5, 2025, 10:44 PM
26.6 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி112

30TH opedGandhi30GANDHI7.jpg - 2025

GUN COTTON SLAB ஐ மதன்லால் பஹ்வா வெடிக்கச் செய்தவுடன்,அந்த சத்தத்தை கேட்ட மாத்திரத்தில்,

காலையில் பாட்கேயிடம் காட்டப்பட்ட பணியாளர்கள் தங்குமிடத்தில் அந்த அறையின் சிமெண்ட் ஜாலியின் வழியாக,அவர் கோபால் கோட்ஸேயின் ரிவால்வரை பயன்படுத்தி காந்தியை சுட வேண்டும் ;

இதற்கிடையே ஷங்கர் கிஷ்டய்யா,காந்தியை மிக அருகில் நெருங்கி,பாட்கேயின் .32 ரிவால்வரை பயன்படுத்தி அதிலிருந்த பாக்கி மூன்று குண்டுகளை ( ஒரு குண்டு பயிற்சியின் போது வீணானது நினைவிருக்கலாம் )காந்தியை சுட வேண்டும்.

பாட்கே ஒரு கையெறி குண்டை சிமெண்ட் ஜாலி வழியாக,ரிவால்வரின் BARREL ஐ கொண்டு வெளியே தள்ளி வெடிக்கச் செய்ய வேண்டும் ;

ரிவால்வர் வெடிக்கும் சத்தம்தான் மற்றவர்களுக்கு சிக்னல் ;உடனே மற்றவர்கள் கையெறி குண்டுகளை காந்தி இருக்கும் திசை நோக்கி வீச வேண்டும் ;

இதற்காக,பாட்கே,ஷங்கர் கிஷ்டய்யா,கார்கரே,மதன்லால் மற்றும் கோபால் கோட்ஸே ஆகியோரிடம் தலா ஒரு வெடிகுண்டு கொடுக்கப்பட்டது.

ஆப்தேயும் நாதுராமும் எல்லாம் சரியாக நடப்பதை உறுதி செய்ய சிக்னல்கள் கொடுத்த வண்ணம் இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

ஏதாவது கேள்விகள் இருக்கிறதா ?

யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

திட்டம் எல்லாவிதத்திலும் சரியாக இருப்பதாக எண்ணினார்கள்.

எதுவும் தவறாக போக வாய்ப்பில்லை.

GUN COTTON SLAB பிரச்சனையின்றி வெடித்து எதிர்பார்த்த பதற்றத்தை உருவாக்கும் ;

காந்தி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்புறமிருந்த பணியாளர்கள் அறைக்குள் நுழைந்து அறையின் ஜாலி வழியாக ,கோபால் கோட்ஸேயின் ரிவால்வரை பயன்படுத்தி பாட்கே காந்தியை சுட்டு விட முடியும் ;

காலையில் சரியாக வெடிக்கத் தவறிய பாட்கேயின் சிறிய ரிவால்வர்,காந்திக்கு மிக அருகாமையிலிருந்து சுடுவதால் உரிய வேகம் கிடைத்து சரியாக சுடும் ;

அதன் பிறகு அனைவரும் தங்கள் வசமிருந்த கையெறி குண்டுகளை திட்டமிட்டபடி காந்தி இருந்த திசை நோக்கி எறிந்து விட்டு,அந்த இடத்திலிருந்து எதுவும் நடக்காதவாறு சென்று விட முடியும்;

அனைவரும் தங்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பிச் சென்று,ஓரிரு நாட்களுக்கு,வெளியே தலைக்காட்டாமல் இருந்து விட்டு,

ரயில்களையும்,விமானங்களையும் பிடித்துக் கொண்டு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விடலாம்.

தேசத்திற்கு பெரும் துரோகம் இழைத்து விட்ட மாபாவி ஒருவரைக் கொன்று விட்ட திருப்தியில் வாழ்க்கையை தொடரலாம்.

நாடே,அவர்களை உண்மையான தேசபக்தர்களாக,பொதுநல விரும்பிகளாக,கதாநாயகர்களாக கொண்டாடும்.

இப்படியாக கற்பனையில் அந்த எழுவரும் மிதந்தனர்.

அவர்கள் கூறிய பல விஷயங்கள் ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு புரியாததைப் பற்றி ஆப்தே கவலை கொள்ளவில்லை ;

காந்தி எப்படி இருப்பார் என்பது ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு தெரியாததும் அவருக்கு பிரச்சனையில்லை.

இதையெல்லாம் விளக்கி அவருக்கு புரிய வைக்க வேண்டியது அவருடைய எஜமானரான திகம்பர் பாட்கேயின் வேலை;

திகம்பர் பாட்கே இதை ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு எப்படி விளக்கினார் ?

தான் யாரை நோக்கி சுடுகிறாரோ,அவரை நோக்கி ஷங்கர் கிஷ்டய்யா சுட வேண்டும் ; தான் யார் மீது குண்டை எறிகிறாரோ அவர் மீது ஷங்கர் கிஷ்டய்யா குண்டை எறிய வேண்டும் ;

அவ்வளவுதான்.

மேலும் விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை …

தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.

திட்டத்தில் சிறுசிறு திருத்தங்களை செய்துக் கொண்டனர்.

நேரம் நெருங்க நெருங்க அவர்களின் பதற்றம் அதிகரித்தது….

சிந்திக்கும் திறன் குறையத் தொடங்கியது.

திடீரென அனைவரும் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆப்தே அறிவித்தார்.

அவசர அவசரமாக ஒவ்வொருவருக்கும் ஒரு புது பெயர் சூட்டப்பட்டது.

நாதுராம் கோட்ஸே ‘ தேஷ்பாண்டே ‘ ஆனார் ;
ஆப்தே ‘ கர்மர்கர் ‘ ஆனார் ;

கார்கரே ‘ வ்யாஸ் ‘ ஆனார் ; பாட்கே ‘ பந்தோபந்த் ‘ ஆனார் ; சங்கர் கிஷ்டய்யா ‘ துக்காராம் ‘ ஆனார்.

கோபால் கோட்ஸேக்கும்,மதன்லால் பஹ்வாவிற்கும் என்ன பெயர் கொடுக்கப்பட்டது என்பதை அவர்கள் மட்டும் அல்ல,வேறு யாரும் கூட பின்னர் நினைவு கூர முடியவில்லை.

அந்த குழப்பமான சூழ்நிலையில்,இந்த புதிய பெயர்களை நினைவு வைத்துக் கொள்ள முடியாது என்பது கூட அவர்களுக்கு புரியாமல் போனது.

(தொடரும்)

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories