ராகுலுக்கு எதிர்ப்பு காட்டும் மேற்கு வங்க காங்கிரஸார்! மம்தாவுடன் கூட்டணிக்கு ‘நறுக்’!

mamta bjp rally - 2026

புது தில்லி: கோல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவருடன் போனில் பேசி ஆதரவு தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேற்கு வங்க காங்கிரஸார்.

இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மேற்கு வங்க காங்கிரஸார். தங்களின் இந்தக் கோரிக்கையை, கட்சி தலைவர் ராகுலும் ஏற்றுக் கொண்டார் என்று, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது… வங்கத்தில் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பது காங்கிரசுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இதை ராகுல் காந்தியிடம் எடுத்துச் சொன்னோம். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். திரிணாமுல் நடவடிக்கையால், பாஜக.,வே இங்கு பலம் பெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை நீங்களே தெரிவியுங்கள் என்றும், அதனை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் ராகுல் கூறினார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து இடதுசாரிகள் யோசிக்க வேண்டும். இடது சாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.

ஏற்கெனவே, கடந்த 2011ல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸைப் பிரித்து உருவாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், இருக்கும் கொஞ்ச நஞ்ச காங்கிரஸையும் பலவீனப் படுத்தி வருகிறார் என்று புகார் கூறுகின்றனர் மேற்கு வங்க காங்கிரஸார். தங்கள் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்கிவிடுவதாக காங்கிரஸார் புகார் கூறுகின்றனர். எனவேதான், இருக்கும் மிச்சம் மீது காங்கிரஸும் மம்தாவுடன் கூட்டணி வைத்தால் காணாமல் போய் விடும் என்று கூறுகின்றனர்.

முன்னதாக, மம்தா பானர்ஜி நடந்திய தர்ணா போராட்டத்தின் போது, ஒரு லைனில் ராகுல் வர இன்னொரு செல்போன் தொடர்பில் மயாவதி வர, ராகுலின் போனை காத்திருப்பில் வைக்கச் சொல்லிவிட்டு, மாயாவதியுடன் உடனே போனில் பேசினார் மம்தா பானர்ஜி என்று புகார் கூறப்படுகிறது. காங்கிரஸார் இதைக் கூறி, மாயாவதிக்கு கொடுக்கும் மதிப்பை மம்தா இங்கே ராகுலுக்குக் கொடுப்பதில்லை! ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட வேண்டும் என்ற கோஷத்தையே மம்தா வெறுக்கிறார். அவருக்கு தாமே பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை! எனவே ராகுலை மதிக்காத மம்தாவுடன் கூட்டணி வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, மேற்கு வங்க காங்கிரஸாரை கடந்த வாரம் தில்லிக்கு நேரில் அழைத்து அவர்களுடன் கலந்தாலோசித்தார் ராகுல்! அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனினும், மம்தாவின் பிரச்னைகள் குறித்து அதில் எழுப்ப பட்டுள்ளது. எனவே, மேற்கு வங்கத்தில் மம்தாவுடனான கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க இயலாமல் திணறுகிறது காங்கிரஸ் மேலிடம்!

ஏற்கெனவே ஆந்திரத்தில் நாயுடுவுடன் முகத்தை முறித்துக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டது காங்கிரஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 6 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!தமிழ்நாடு ஆளுநராக இருந்த...

சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

சனாதன தர்மத்தில் கருத்து வேறுபாடுகளும் வாதங்களும், விவாதங்களும் எண்ணற்றவை. அவற்றைத் தவறு என்று கூறுவதற்கில்லை. பன்முகத் தன்மை என்பது மனித ஐயல்பு.

பஞ்சாங்கம் மார்ச் 5 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 6 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!தமிழ்நாடு ஆளுநராக இருந்த...

சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

சனாதன தர்மத்தில் கருத்து வேறுபாடுகளும் வாதங்களும், விவாதங்களும் எண்ணற்றவை. அவற்றைத் தவறு என்று கூறுவதற்கில்லை. பன்முகத் தன்மை என்பது மனித ஐயல்பு.

பஞ்சாங்கம் மார்ச் 5 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

Entertainment News

Popular Categories