புடவை விலை 10 ரூவாதான்..! அடித்து பிடித்து அலைமோதி… காயமடைந்த பெண்கள்!

Published:

10rupeesaree hyderabad - 2026

பத்து ரூபாய்க்குப் புடவை தருவதாக விளம்பரம் பார்த்ததால், விழுந்தடித்து ஓடி வந்த பெண்களால் ஹைதரபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத் நகரம் சித்திப்பேட்டை என்ற இடத்தில் சி எம் ஆர் ஷாப்பிங் மால் புதுக் கிளையைத் திறந்துள்ளார்கள். விளம்பர உத்தியாக பத்து ரூபாய்க்கு ஒரு புடவை என்று  விளம்பரம் செய்திருந்தார்கள்.

இந்த விளம்பரத்தைப் பார்த்ததுதான் தாமதம், பெண்கள் பலரும் வெகு ஆர்வத்துடன் கூட ஆரம்பித்துவிட்டார்கள். பிப்ரவரி 16 நேற்று காலை இந்தச் செய்தி அறிந்து காலையிலிருந்தே பெண்களும் இளம்பெண்களும் கடையின் முன் வரிசை கட்டத் தொடங்கிவிட்டார்கள்.

கடையின் முன்னர் பெரும் கூட்டம் கூடி விட்டது. காலை பதினோரு மணிக்கு கடை ஷட்டரைத் திறந்தவுடன் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பெண்கள் உள்ளே நுழைந்தனர்.

10rupee saree hyederabad - 2026

பத்து ரூபாய் புடவைக்காக நெருக்கியடித்த கூட்டத்தினால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, பதினைந்து பேருக்கு மேல் பெண்கள் காயமடைந்தனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இம்மாதிரியான கூட்டங்கள் என்றால் திருடர்களுக்குக் கொண்டாட்டம் இல்லாமலா?! அவர்களும் தம் பங்குக்கு கைவரிசையைக் காட்டினர். ஒரு பெண் தன் ஐந்து பவுன் தங்க நகையையும், ஐயாயிரம் ரூபாயும் டெபிட் கார்டும் வைத்திருந்த பர்சை பறிகொடுத்துத் தவித்தார்.  அப்பெண் நாங்குநூறு மண்டலம் திம்மயாபல்லி என்ற ஊரைச் சேர்ந்த ஊர்மிளா!

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிஎம்ஆர் மால் மேலாளர் மற்றும் கடைகளில் விசாரணை நடத்தினர். இந்த நெரிசலில் சிக்கி காயமடைந்த பெண்கள் ஸிஎம்ஆர் கடைக்காரர்கள்தான் தமக்கு சரியான சிகிக்கை அளிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினர்.

மெயின் கதவைத் திறக்காமல் சிறிய செல் கதவு வழியாக புடவை வாங்க வந்த வாடிக்கையாளர்களை அனுப்பியதுதான் தள்ளுமுள்ளுவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் கரீம் நகர், வரங்கல் நகரங்களில் கூட இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img