பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு!

narayanasamy puduchery - 2026

பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. விவாதம் நடத்த தயார் என இருவரும் சவால் விடுத்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் தனது செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சட்டத்தில் எனக்குள்ள அதிகார வரம்புக்குள்தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்று கூறினார்.

இதனிடையே, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, சிபிம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

puduchery narayanasamky - 2026

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,  ஆளுநர் கிரண்பேடி டிவிட்டர் மூலம் முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது சரியா ? அதிகார பிரச்சனைக்கு காரணமே கிரண்பேடியின் அகங்காரம்தான் என்று கூறினார்.

முன்னதாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த பிப்.14 அன்று தில்லி சென்றிருந்த கிரண்பேடி இன்று அவசரமாக புதுச்சேரி திரும்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி பிப்.,20 வரை சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், பிப்.,20 அன்று நள்ளிரவுதான் புதுச்சேரி திரும்ப உள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து நாராயணசாமி தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, கிரண்பேடிக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார் நாராயணசாமி! கிரண்பேடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 5 ஆவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிரண்பேடி அவசரமாக புதுச்சேரி திரும்பியுள்ளார்.

 

ஆளுநர் மாளிகையின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால், முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய போவதாகக் ஏற்கனவே கூறி இருந்த கிரண்பேடி, புதுச்சேரி திரும்பியதும் முக்கிய முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. இருப்பினும், அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories