December 6, 2025, 6:24 PM
26.8 C
Chennai

இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி! மும்பை தாக்குதல் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை!

 

07 July31 Modi on Imran khan - 2025

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இது இந்தியா மேற்கொண்ட சர்வதேச நெருக்கடிக்கு பாகிஸ்தான் அரசு பணிந்ததைக் காட்டுவதாகக் கூறப் படுகிறது. இது இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப் படுகிறது.

2008 நவ.26ஆம் தேதியை இந்தியர்கள் எவரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அரபிக் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பத்து பேர், பல இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி 18 போலீசார் உட்பட 166 பேரைக் கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பு. இந்தத் தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கிய போதும், இதுவரை அந்த அமைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

kashmir5 - 2025

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆயினும், இந்தியாவிடம் இந்த அமைப்புதான் இதைச் செய்தது என்ற ஆதாரங்களைத் தரும்படி பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. ஆனால், அதற்கான ஆதாரங்களைத் தரமுடியாது என்று இந்தியா மறுத்துவிட்டது. இந்தத் தாக்குதலை தாங்கள் தான் செய்தோம் என்று ஜெய்ஷ் இ மொஹம்மத் கூறிய நிலையில், ஆதாரங்களைத் தருமாறு பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டது நகைப்புக்குரியது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

mumbai terror attack - 2025

இதை அடுத்து, அந்த அமைப்பை தனது மண்ணில் இருந்து சுதந்திரமாக செயல்படும்படி செய்து, உதவிகள் புரிந்து வரும் பாகிஸ்தான் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி முற்றியது. மேலும், இது போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்களது மண்ணில் இருந்து செயல்படுவதை பாகிஸ்தான் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை உலக நாடுகள் நெருக்கின.

hafeez saieed - 2025

இதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை விதிக்கவும், அந்த அமைப்பின் அறக்கட்டளையான பலாஹ்-இ- இன்சானியாத் ஃபௌண்டேஷனுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப் பட்டது.

இருப்பினும் ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்புக்கான தடை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories