நாடே மகிழ்ச்சி அடையும் போது எதிர்க்கட்சிகள் துக்கம் விசாரிக்கின்றன!

modi manmohan - 2026

பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்பதா என்று மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்ததற்கான ஆதாரங்களைக் கேட்டு, ராணுவத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இவ்வாறு கேள்வி எழுப்பினார். இந்தப் பொதுக்கூட்டத்தில், பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரருக்கு அஞ்சலி செலுத்தினார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததை எண்ணி ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் நமது சொந்த மண்ணைச் சேர்ந்த சிலர் சர்ஜிகல் தாக்குதல் தொடர்பாக சந்தேகங்களை எழுப்புகின்றனர்… என்று காங்கிரஸ் கட்சியினரை மறைமுகமாக சாடினார் மோடி.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”39″ order=”desc”]

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை எதிர்க் கட்சிகள் கேட்கத் தொடங்கி இருப்பது, எதிரி நாட்டுக்கு பயன் விளைவிக்கக் கூடியது என்று கூறிய மோடி,  பல ஆண்டுகளாக இருந்து வந்த ஊழல் மற்றும் இடைத்தரகர் முறையை ஒழிக்கும் தைரியம் பாஜக அரசுக்கு மட்டுமே உள்ளது என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்து கைத்தட்டி, தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய மோடி…

modi in amethi - 2026

அவங்க சொல்றாங்க.. மோதியை முடிச்சுடலாம்னு; நான் சொல்றேன் நாம ஒண்ணா சேர்ந்து பயங்கரவாதத்தை முடிக்கலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. நாம ஒண்ணா சேர்ந்து போராடி மோதியை ஒழிச்சுடலாம்னு; நான் சொல்றேன் நாம ஒண்ணா சேர்ந்து, நம் தேசத்துக்காக எதிரிகளோடு போராடும் நம்மோட ராணுவ படையை பலப்படுத்தலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. மோதியை ஒழிச்சு கட்டலாம்னு; நான் சொல்றேன் நாம எல்லாருமே ஒண்ணா சேர்ந்து ஊழலையும், லஞ்சத்தையும் ஒழுச்சு கட்டலாம்னு..!

அவங்க சொல்றங்க.. மோதியை காலி பண்ணலாம்னு; நான் சொல்றேன்.. நாம எல்லாருமே சேர்ந்து வேலை செய்து நாட்டின் திறந்தவெளிக் கழிப்பிடத்தை காலி பண்ணலாம்னு..!

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

அவங்க சொல்றாங்க.. மோதியை தீர்த்துக் கட்டலாம்னு; நான் சொல்றேன் தேசத்தின் வறுமையையும், மக்களின் ஊட்டச்சத்து குறைவையும் தீர்த்துக் கட்டலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. ஒண்ணா சேர்ந்து போராடி மோதியைத் துரத்தலாம்னு; நான் சொல்றேன் நாம ஒண்ணா கை கோர்த்து 21 வது நூற்றாண்டின் தலைவராக நம் பாரதத்தை மாத்தலாம்னு..!

அவங்களோட ஒரே குறிக்கோள்.. மோதியை ஒழிப்பது; ஆனால் இந்த மோதியோட குறிக்கோள்.. இரவும் பகலுமாக உழைச்சு பாரத மாதாவையும், 130 கோடி பாரதீயர்களையும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துக்கிட்டு போகலாம்னு..!

அதனால்.. என்னுடைய அன்பு சகோதர சகோதரிகளே.. நீங்கதான் உங்களுக்கு எது வேணும்னு முடிவு செய்யணும்..! என்று.. பிரதமர் நரேந்திர மோடி பாட்னா – சங்கல்ப் ராலியில் உத்வேகம் ஊட்டும் வகையில் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories