தில்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி! ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை!

sheila dikshit - 2026

தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்ததுடன், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளது.

தில்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக., எதிர்ப்பு என்ற நிலையில் அண்மைக் காலங்களில் ஒன்றாகச் சேர்ந்திருந்த காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் 24 கட்சிகளின் மெகா கூட்டணியில் இருப்பதால்,. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முதலில் துண்டித்தவர் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கூறினார். ஆனால் பின்னர், ஆம் ஆத்மி வேட்பாளர்களாக 6 பேரை அறிவித்து, ஒரு தொகுதியில் பின்னர் வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என்று கூறி, தனித்துப் போட்டி என அறிவித்தார்.

அதே போல், கேஜ்ரிவாலால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித் ஆம் ஆத்மியுடனான கூட்டணியை முற்றிலும் விரும்பவில்லை. இதனால், தில்லி காங்கிரஸார், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தில்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில தலைவர்கள் கருத்தை ராகுல் ஏற்றுக் கொண்டாராம்.

இது குறித்து, ஷீலா தீட்சித் கூறுகையில் “ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை, இது இறுதியானது. முடிவை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்,” என்றார்.

மோடி எதிர்ப்பு ஒன்றே லட்சியம் என மேடையில் ஒன்று சேர்ந்த கட்சிகள், தங்களுக்குள் ஒருமித்த ஆரோக்கியமான திட்டங்கள் இன்மையால், போட்டியிடுவதிலேயே தனித்து நிற்கத் தொடங்கி விட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories