தில்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி! ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை!

sheila dikshit - 2026

தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்ததுடன், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளது.

தில்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக., எதிர்ப்பு என்ற நிலையில் அண்மைக் காலங்களில் ஒன்றாகச் சேர்ந்திருந்த காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் 24 கட்சிகளின் மெகா கூட்டணியில் இருப்பதால்,. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முதலில் துண்டித்தவர் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கூறினார். ஆனால் பின்னர், ஆம் ஆத்மி வேட்பாளர்களாக 6 பேரை அறிவித்து, ஒரு தொகுதியில் பின்னர் வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என்று கூறி, தனித்துப் போட்டி என அறிவித்தார்.

அதே போல், கேஜ்ரிவாலால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித் ஆம் ஆத்மியுடனான கூட்டணியை முற்றிலும் விரும்பவில்லை. இதனால், தில்லி காங்கிரஸார், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தில்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில தலைவர்கள் கருத்தை ராகுல் ஏற்றுக் கொண்டாராம்.

இது குறித்து, ஷீலா தீட்சித் கூறுகையில் “ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை, இது இறுதியானது. முடிவை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்,” என்றார்.

மோடி எதிர்ப்பு ஒன்றே லட்சியம் என மேடையில் ஒன்று சேர்ந்த கட்சிகள், தங்களுக்குள் ஒருமித்த ஆரோக்கியமான திட்டங்கள் இன்மையால், போட்டியிடுவதிலேயே தனித்து நிற்கத் தொடங்கி விட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories