தில்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி! ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை!

sheila dikshit - 2026

தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்ததுடன், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளது.

தில்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக., எதிர்ப்பு என்ற நிலையில் அண்மைக் காலங்களில் ஒன்றாகச் சேர்ந்திருந்த காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் 24 கட்சிகளின் மெகா கூட்டணியில் இருப்பதால்,. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முதலில் துண்டித்தவர் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கூறினார். ஆனால் பின்னர், ஆம் ஆத்மி வேட்பாளர்களாக 6 பேரை அறிவித்து, ஒரு தொகுதியில் பின்னர் வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என்று கூறி, தனித்துப் போட்டி என அறிவித்தார்.

அதே போல், கேஜ்ரிவாலால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித் ஆம் ஆத்மியுடனான கூட்டணியை முற்றிலும் விரும்பவில்லை. இதனால், தில்லி காங்கிரஸார், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தில்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில தலைவர்கள் கருத்தை ராகுல் ஏற்றுக் கொண்டாராம்.

இது குறித்து, ஷீலா தீட்சித் கூறுகையில் “ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை, இது இறுதியானது. முடிவை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்,” என்றார்.

மோடி எதிர்ப்பு ஒன்றே லட்சியம் என மேடையில் ஒன்று சேர்ந்த கட்சிகள், தங்களுக்குள் ஒருமித்த ஆரோக்கியமான திட்டங்கள் இன்மையால், போட்டியிடுவதிலேயே தனித்து நிற்கத் தொடங்கி விட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories