காங்கிரஸ் ஒரு ‘பாகிஸ்தானி ஏஜெண்ட்’! வேதனையில் பீகார் மாநிலத் தலைவர் ராஜினாமா!

binodh sharma - 2026
Bihar Congress Spokesperson Binod Sharma, Courtesy: up.punjabkesari.in

பீகார் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணம், காங்கிரஸ் கட்சியை மக்கள் இப்போது பாகிஸ்தானி எஜெண்ட் என்று சொல்கிறார்கள் என்பதுதான்!

பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக, அக்கட்சியின் பொதுச் செயலரும் செய்தித் தொடர்பாளருமான பினோத் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில்…

இந்திய விமானப் படை விமானங்கள், பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். இது தொண்டர்களிடையே பெரிதும் எதிரொலித்துள்ளது. கட்சித் தலைவர்களின் பிரசாரத்தால், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏன் தேசப் பற்றோ மதிப்போ இல்லாமல் இப்படி பிரசாரம் செய்கிறது என்று கேள்வி கேட்கும் பொதுமக்கள், காங்கிரஸ் ஒரு பாகிஸ்தானி ஏஜெண்ட் என்று அடித்துக் கூறுகின்றனர். இதைக் கேட்கும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

Resignation of Binod Sharma - 2026

மேலும், இது குறித்து கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சர்மா எழுதியுள்ள கடிதத்தில், நான் நமது கட்சித் தொண்டர்களின் இத்தகைய மனக்குமுறலை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அது குறித்து எதையும் காதுகொடுத்துக் கூட காங்கிரஸ் தலைமை கேட்கவில்லை. இந்த நாடே புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பெரும் கொந்தளிப்பிலும் வேகத்திலும் இருந்த போது, காங்கிரஸ் கட்சி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வது வெட்க கரமானது. அதுவும் நம் விமானப் படை வீரர்களின் செயல்திறனை கேள்வி கேட்கும் விதமாக, எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர், அவர்களின் உடல்கள் எங்கே, ஆதாரம் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டு அரசியல் செய்வதை பீகார் மாநில காங்கிரஸ் தொண்டர்களே விரும்பவில்லை!

காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வரும் அறிக்கைகளும் மேடைப் பேச்சுகளும், நம் ராணுவத்தினரைக் குறை சொல்வது போலவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பது போலவும் அமைந்திருப்பது வெட்கக் கேடு. நம் காங்கிரஸ் கட்சி இப்போது தேசியவாதத்தையும், தேசப் பற்றையும் இழந்துவிட்டது என்ற கருத்தோட்டம் நம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் மக்கள், காங்கிரஸ் கட்சி ஒரு பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த நாட்டின் மீதுள்ள அக்கறையில் இருக்கும் ஒரு நல்ல குடிமகன் என்ற அளவில், நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்… – என்று குறிப்பிட்டு ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார் பினோத் சர்மா.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அவரது இந்தக் கடிதம் இப்போது பீகார் மாநில அரசியலில் மட்டுமின்றி, வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Congress spokesperson Binod Sharma has tendered his resignation from the party citing the reason that he feels “ashamed” to be called a Congressi after his party asked for the proof of air strikes at Balakot, Pakistan by the Indian Air Force (IAF). He wrote that due to the lack of patriotism and nonchalant attitude of the party workers, people have started viewing Congress party as a Pakistani agent.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories