காங்கிரஸ் ஒரு ‘பாகிஸ்தானி ஏஜெண்ட்’! வேதனையில் பீகார் மாநிலத் தலைவர் ராஜினாமா!

binodh sharma - 2026
Bihar Congress Spokesperson Binod Sharma, Courtesy: up.punjabkesari.in

பீகார் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணம், காங்கிரஸ் கட்சியை மக்கள் இப்போது பாகிஸ்தானி எஜெண்ட் என்று சொல்கிறார்கள் என்பதுதான்!

பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக, அக்கட்சியின் பொதுச் செயலரும் செய்தித் தொடர்பாளருமான பினோத் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில்…

இந்திய விமானப் படை விமானங்கள், பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். இது தொண்டர்களிடையே பெரிதும் எதிரொலித்துள்ளது. கட்சித் தலைவர்களின் பிரசாரத்தால், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏன் தேசப் பற்றோ மதிப்போ இல்லாமல் இப்படி பிரசாரம் செய்கிறது என்று கேள்வி கேட்கும் பொதுமக்கள், காங்கிரஸ் ஒரு பாகிஸ்தானி ஏஜெண்ட் என்று அடித்துக் கூறுகின்றனர். இதைக் கேட்கும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Resignation of Binod Sharma - 2026

மேலும், இது குறித்து கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சர்மா எழுதியுள்ள கடிதத்தில், நான் நமது கட்சித் தொண்டர்களின் இத்தகைய மனக்குமுறலை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அது குறித்து எதையும் காதுகொடுத்துக் கூட காங்கிரஸ் தலைமை கேட்கவில்லை. இந்த நாடே புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பெரும் கொந்தளிப்பிலும் வேகத்திலும் இருந்த போது, காங்கிரஸ் கட்சி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வது வெட்க கரமானது. அதுவும் நம் விமானப் படை வீரர்களின் செயல்திறனை கேள்வி கேட்கும் விதமாக, எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர், அவர்களின் உடல்கள் எங்கே, ஆதாரம் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டு அரசியல் செய்வதை பீகார் மாநில காங்கிரஸ் தொண்டர்களே விரும்பவில்லை!

காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வரும் அறிக்கைகளும் மேடைப் பேச்சுகளும், நம் ராணுவத்தினரைக் குறை சொல்வது போலவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பது போலவும் அமைந்திருப்பது வெட்கக் கேடு. நம் காங்கிரஸ் கட்சி இப்போது தேசியவாதத்தையும், தேசப் பற்றையும் இழந்துவிட்டது என்ற கருத்தோட்டம் நம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் மக்கள், காங்கிரஸ் கட்சி ஒரு பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த நாட்டின் மீதுள்ள அக்கறையில் இருக்கும் ஒரு நல்ல குடிமகன் என்ற அளவில், நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்… – என்று குறிப்பிட்டு ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார் பினோத் சர்மா.

அவரது இந்தக் கடிதம் இப்போது பீகார் மாநில அரசியலில் மட்டுமின்றி, வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Congress spokesperson Binod Sharma has tendered his resignation from the party citing the reason that he feels “ashamed” to be called a Congressi after his party asked for the proof of air strikes at Balakot, Pakistan by the Indian Air Force (IAF). He wrote that due to the lack of patriotism and nonchalant attitude of the party workers, people have started viewing Congress party as a Pakistani agent.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories